1எம்டிபி பணம் பிஎன் உறுப்புக்கட்சிகளுக்குக் கொடுக்கப்பட்டதா என்றும் விசாரிக்கப்படுகிறதாம்

1எம்டிபி-இலிருந்து   பிஎன்  உறுப்புக்கட்சிகளுக்கும்  அவற்றின்    தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகளுக்கும் பணம்  கொடுக்கப்பட்டதாகக்  கூறப்படுவது   பற்றியும்   அதிகாரிகள்  விசாரிக்கத்    தொடங்கியிருப்பதாக  சிங்கப்பூர்   ஸ்ரேய்ட்ஸ்   டைம்ஸ்    செய்தி  ஒன்று  கூறுகிறது.

இவ்விசாரணை  பல  “அதிர்ச்சிகளை”   உண்டாக்கலாம்    என்றும்  அது    தெரிவித்தது.  ஏனென்றால்  பணம்   பெற்ற    தரப்புகளின்   வங்கிக்   கணக்குகள்  விசாரணை  முடியும்வரை   அல்லது    வழக்கு   முடியும்வரை   முடக்கப்படலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட    பிரதிநிதிகளாக   இருந்தால்   அவர்களின்   வங்கிக்  கணக்குகள்   முடக்கப்படுவதுடன்  எம்பி   அல்லது   சட்டமன்ற  உறுப்பினர்    தகுதியையும்   இழக்க   நேரும்”,  என  அச்செய்தி   கூறியது.

இக்கூற்று   உண்மையாக   இருப்பின்  பல்வேறு   கட்சிகளின்  பில்லியன்   கணக்கான  ரிங்கிட்  மதிப்புள்ள  தொழில்கள்   பாதிக்கப்படலாம்.