அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுமாறு விக்னேஸ்வரனிடம் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வலியுறுத்து.!

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மாறுபட்ட வகையில் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுமாறு கேட்டுக்கொண்டதாக என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் ஸ்ரீலங்காவிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் கௌரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுமாறும் குட்டையை குழப்ப வேண்டாம் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் கௌரிஸ் கேட்டுக்கொண்டதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் கௌரிஸ் நேற்று மாலை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போதே பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மாறுபட்ட வகையில் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுமாறு கேட்டுக்கொண்டதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: