சிரியா போரில் ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ – ஐ.நா. குற்றச்சாட்டு

கிழக்கு கூட்டா பகுதியை முற்றுகையிட நடத்தப்பட்ட போரில் சிரிய அரசு ஆதரவு படைகள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடுகள் மீது குண்டுகள் வீசப்பட்டது, உணவு மறுக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளால், கிளர்ச்சியாளர்கள் குடியிருப்பு வாசிகளுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

டமாஸ்கஸ் அருகில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புகளில் பாகுபாடின்றி தொடர்ந்து குண்டு வீசியது போர் குற்றமாகும் என கிளர்ச்சியாளர்கள் குழு மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. -BBC_Tamil