மூசா: அமைதியான அதிகார மாற்றத்தை போலீசார் உறுதி செய்ய வேண்டும்

musaஅதிகார மாற்றம் ஏற்படுமானால் அது அமைதியாக நிகழ்வதைப் போலீஸ் படை உறுதி செய்ய வேண்டும் என  முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் கேட்டுக் கொண்டுள்ளார்.

“அதிகார மாற்றம் சுமூகமாக நிகழ்வதற்கு நிலைமை அமைதியாக இருப்பதையும் போலீஸ் படை உறுதி செய்ய  வேண்டும்.”

“அதிகார மாற்றத்தை சீர்குலைக்க ஏதாவது செய்யத் திட்டமிடும் எந்தத் தரப்பு மீதும் போலீஸ் படை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என மூசா இன்று பிற்பகல் பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.

பிஎன் பக்காத்தான் ராக்யாட் ஆகியவற்றில் யார் அதிகாரத்துக்கு வந்தாலும் வரும் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுரை சொன்னார்.