தியான் சுவா, ஹரிஸ் இப்ராகிம் ஆகியோர் காவல்துறையினரால் கைது

arrestபிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவும், Anything But Umno (அபு) அமைப்பின் தலைவர் ஹரிஸ் இப்ராகிமும் இன்று பிற்பகல் தனித் தனியே கைது செய்யப்பட்டனர்.

வார இறுதியில்  பெட்டாலிங் ஜெயாவில் திட்டமிடப்பட்டுள்ள தேர்தல் மோசடி-எதிர்ப்புப் பேரணி  தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

தியான் சுவா,  கோலாலும்பூர் குறைந்தகட்டண விமான முனையத்தில் பயணப் பைகளைச் சோதனைக்குக் கொண்டுசென்றபோது கைது செய்யப்பட்டதாக டிவிட்டரில் தகவல் தெரிவித்திருந்தார்.

1arrest1பிறகு இரண்டாவது முறையாக டிவிட்டர் பக்கம் வந்த அவர்,  1948 தேச நிந்தனைச் சட்டம் பகுதி 4(1)-இன்கீழ் தாம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஹரிஸ் (படத்தில் நடுவில் இருப்பவர்) செகாம்புட்டில் நண்பர்களுடன் பகல் உணவு அருந்திக்கொண்டிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார் என பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செல்வன் கூறினார்.

கைதான இருவரும் ஜிஞ்ஜாங் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

TAGS: