2013 மெட்ரிக்குலேசன் இட ஒதுக்கீடு: புத்ரா ஜெயாவில் அமைதிக் கூட்டம்

tvg pixநடப்பு ஆண்டில் மெட்ரிக்குலேசன் படிப்பிற்கு விண்ணப்பம்  செய்து இடம் கிடைக்காமல் இருக்கும் மாணவர்கள் சம்பந்தமாக எதிர்வரும் திங்கள்கிழமை (10.6.2013)  காலை மணி 11.30 க்கு புத்ரா ஜெயா பிரதமர் அலுவலகம் முன் ஓர் அமைதிக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து பிரதமர் நஜிப் ரசாக்கை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி அமைச்சர் சுப்பிரமணியத்தை கேட்டுக் கொண்டுள்ளோம் என்று ஏற்பாட்டாளர் ஆ. திருவேங்கடம் கூறுகிறார்.

ஹிண்ட்ராப்புடன் அரசு செய்து கொண்ட 7..5%  மெட்ரிக்குலேசன் இட ஒதுக்கீடு ஒப்பந்தப்படி நமக்கு 2100 இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை பிரதமரிடம்  நினைவு கூறுவோம் என்றாரவர்.

மெட்ரிக்குலேசன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்க வேண்டுமென ஏற்பாட்டாளரான அவர் கேட்டுக்கொண்டார்.

மாணவர்கள் பெற்றோர் துணையுடன் வரவேண்டும். மெட்ரிக்குலேசன் விண்ணப்பம் செய்த நகல் படிவம், SPM முடிவு நகல் ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும். மெரிட் புள்ளி 90 எடுத்த மாணவர்களுக்கும் இடம் கிடைக்கவில்லை என்பது கொடுமை.

சென்ற ஆண்டு 1500 இடங்கள் வழங்கப் படவில்லை என்பதற்கு நம்மிடம் ஆதரங்கள் உள்ளன.இந்த முயற்சி வெற்றி பெற்றால் இன்னும் பல நூறு மாணவர்கள் பயனடைவர் என்பது திண்ணம். தொடர்புக்கு ஆ.திருவேங்கடம் 017 6470906.