நாடாளுமன்ற விளக்கக் கூட்டத்தில் பக்காத்தான் எம்பிகள் கலந்துகொள்ளவில்லை

1 parlஇன்று காலை நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற விளக்கமளிப்புக் கூட்டத்தைப் புறக்கணிப்பதுபோல் பக்காத்தான் ரக்யாட்டின் 89 எம்பிகளில் 88 பேர் அக்கூட்டத்துக்குச் செல்லவில்லை.

எதிர்த்தரப்பிலிருந்து ஒரே ஒருவர் மட்டும், டிஏபி-இன் பக்ரி எம்பி எர் தெக் வா மட்டுமே, அதில் கலந்து கொண்டார்.

விளக்கக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, “அவர்களுக்கு ஏதாவது காரணம் இருந்திருக்கும். அதனால்தான் வரவில்லை. இது புறக்கணிப்பு ஆகாது”, என்றார்.

கூட்டத்தில் கலந்துகொள்வது கட்டாயமல்ல என்றும் அவர் விளக்கினார்.

“கூட்டம் புதிய எம்பிகளுக்காகத்தான். மூத்தவர்கள் பணி செய்யும் இடத்தை மதிப்பவர்களாக இருந்தால் வந்திருக்க வேண்டும். அவர்கள் வராமல் போனதற்கு காரணம் இருக்கும்”.

கூட்டத்துக்கு வந்திருந்தால் சீருடைகளுக்கு அளிப்பாணை அளித்திருக்கலாம், அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

TAGS: