எம்ஏசிசி-க்கு அனைத்துலக ஆலோசனை வாரியம்

SPRMஎம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அறிவுரை  கூறுவதற்கு ஒர் அனைத்துலக ஆலோசனை வாரியம் அமைக்கப்படும் என  பிரதமர் துறை அமைச்சர் பால் லாவ் கூறுகிறார்.

“சிறந்த அனைத்துலக நடைமுறைகளுக்கு இணையாக எம்ஏசிசி அடைவு நிலையை  உயர்த்துவதும் எம்ஏசிசி குறித்த அனைத்துலக எண்ணத்தை சீர்படுத்துவதும் அந்த  வாரியம் அமைக்கப்படுவதின் நோக்கம்,” என லாவ் நேற்று விடுத்த அறிக்கை  குறிப்பிட்டது.

அந்த வாரியத்தில் இடம் பெறுவர் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்றாலும்  ஹாங்காங், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் ஆகியவற்றை ஊழல்  தடுப்பு அமைப்புக்களைச் சார்ந்த பிரபலமான தனிநபர்களும் இடம் பெறுவர் என  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

TAGS: