பெர்காசா மற்ற இன என்ஜிஓ-களுடன் கைகோர்க்கிறது

1 ibraஇனவாத அமைப்பாகக் கருதப்படும் பெர்காசா,மலேசிய அனைத்து- இன என்ஜிஓகள் மன்றம் அமைக்க வகைசெய்யும் ஆவணம் ஒன்றில் கையெழுத்திடப்போவதாக தெரிவித்துள்ளது.

கையெழுத்திடும் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு கோலாலும்பூர் கிளப் சுல்தானில்  நடைபெறும். அதனைத் தொடர்ந்து நோன்பு திறக்கும் நிகழ்வும் நடக்கும்.

“நோன்பு திறப்பில் கலந்துகொள்ள சீன, இந்திய, ஓராங் அஸ்லி என்ஜிஓகளும் அழைக்கப்பட்டிருப்பதாக பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த அனைத்து- இன மன்றத்தை பெர்காசா, இந்திய என்ஜிஓ-வான பேரின்பம், புதுயுக சீனர் சங்கம் ஆகிய மூன்றும் சேர்ந்து அமைக்கின்றன.

TAGS: