அமர காவியம் படத்தில் உறைய வைக்கும் உண்மை சம்பவம்!

நடிகர் ஆர்யா தன் தம்பி சத்யாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள அமர காவியம் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை நடிகராக அறிமுகப்படுத்திய நான் பட இயக்குநர் ஜீவா ஷங்கர் இயக்கியிருக்கும் இப்படத்தில் சத்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மியா ஜார்ஜ் நடித்திருக்கிறார். அமர காவியம்…

பாலசந்தர் பாணியில் லாரன்ஸ் – ஒரு டிக்கெட்டுல இரண்டு சினிமா!

1990-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம் ஒரு வீடு இரண்டு வாசல். ஒரே படத்தில் இரண்டு விதமான கதைகளை சொல்லியிருப்பார் பாலசந்தர். இவரின் இந்த முயற்சி அப்போது எல்லோராலும் பாராட்டு பெற்றது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலசந்தரின் வழியில் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தை இயக்க…

சிம்பு படத்துக்கு 8 கோடி செலவு பண்ணிய கௌதம் மேனன்

துப்பறியும் ஆனந்தன் படத்தில் நடிக்க முடியாது என அறிவித்து சூர்யா கைவிட்ட பிறகு திக்குத்தெரியாமல் திகைத்து நின்றார் கௌதம் வாசுதேவ் மேனன். அப்போது, அவருக்கு கை கொடுத்த அஜித், ஏ.எம்.ரத்னத்தை கையைக்காட்டிவிட்டு கால்ஷீட்டும் கொடுத்தார். அஜித் படத்தை ஆரம்பிக்க சில மாதங்கள் இடைவெளி இருந்ததால், அந்தப் படத்திற்கு முன்பே…

ஷங்கருடன் மோத முடிவு செய்துவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!

ராஜபக்சேவின் நண்பர் தயாரிக்கும் படம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது – கத்தி படம். அதனால் பலத்த எதிர்ப்புகள் கிளம்பி ஒருபுறம் கத்தி படத்தை பதம் பார்த்துக்கொண்டிருக்க…அதைப் பற்றி கவலையேப்படாமல் எப்படியும் கத்தி படத்தை தீபாவளிக்கு திரைக்குக் கொண்டு வந்தே தீருவது என்பதை மட்டுமே…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வாரிசு கலாச்சாரம்…!

அரசியலில் மட்டும் வாரிசுகள் வளர்ந்து வாரிசு அரசியலை உருவாக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அதை விட சினிமாவில்தான் வாரிசு கலாச்சாரம் அதிகமாக வளர்ந்து வருகிறது. இன்றைய தேதியில் தங்களது வாரிசுகளை சினிமாவில் இறக்கி விடாத நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு உள்ளது. ஆனால், திரையுலகில் பெருமையான துறையான…

‘மேகா’ இசைஞானியின் ராகா!

இளையராஜாவின் இசையை நம்பி லவ், த்ரில், திகில், சஸ்பென்ஸ்...எல்லாம் கலந்த கலப்படமாக, கலர்ஃபுல் படமாக, கமர்ஷியல் படமாக வந்திருக்கும் திரைப்படம் தான் மேகா! கதைப்படி, ஒரு காவல்துறை உயர் அதிகாரியின் வளர்ப்பு மகனாக வருகிறார் ஹீரோ அஸ்வின். வளர்ந்ததும் இவர், காவல்துறை தடயவியல் நிபுணராகவும் ஆகிறார். அஸ்வின் காவல்துறையில்…

முனி – 3 ஏன் தாமதம்? சொல்கிறார் ராகவா லாரன்ஸ்

காஞ்சனா வெற்றியை தொடர்ந்து ராகவாலாரன்ஸ் எழுதி இயக்கி நாயகனாக நடிக்கும் படம் முனி – 3 (கங்கா). இப்படத்தின் கதாநாயகிகளாக டாப்ஸி, நித்யாமேனன் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஸ்ரீமன், கோவைசரளா ஆகியோரும் நடிக்கிறார்கள். வருகிற 4 தேதி முதல் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாகப் பட உள்ளது. அதுவும் 20 நாட்கள்…

ஷங்கரின் ஐ படத்தில் ஓநாய் தோற்றத்தில் விக்ரம்

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக, நீண்ட நாட்களாக உரவாகி வரும் ஐ படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இப்படத்திற்காக தனது எடையைக் குறைத்தும், கூட்டியும் நடித்துள்ளார் விக்ரம். ஏற்கனவே, இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகமாக உள்ள நிலையில், தற்போது…

தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறை: ஆயிரத்தில் ஒருவன் வெள்ளி…

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படம் மறு திரையீடு செய்யப்பட்டு அப்போதும் வெள்ளிவிழா கொண்டாடுவது இதுவே முதல் முறை. எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடித்து 1965ல் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படம் அப்போதே வெள்ளிவிழா கொண்டாடியது. அந்தப் படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றி அகன்ற திரையில் மீண்டும் வெளியிட்டார்கள்.…

சலீம் – திரை விமர்சனம்

அப்பா, அம்மா இல்லாத சலீம் (விஜய் ஆண்டனி) தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். நேர்மையான எண்ணமும் எந்த பிரச்சனைக்கும் செல்லாமலும் சமூக அக்கறையுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கும் நாயகியான நிஷா(அக்‌ஷா)வுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. அதன்பின் இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் பழகியதில் சலீமின் குணாதிசயங்கள் நிஷாவிற்கு…

நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர விசாரணை

நடிகர் அஜீத்குமார் வீடு திருவான்மியூர் கலாஷேத்ராவில் உள்ளது. கவுதம்மேனன் இயக்கும் படத்தில் அஜீத் தற்போது நடித்து வருவதால் அதற்கான படப்பிடிப்பு பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 108 ஆம்புலன்ஸ் சேவை நம்பருக்கு மர்ம நபர் பேசினான். திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டில்…

தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களின் துன்பத்தை சொல்லும் படம்

“இலங்கையில் தமிழர்கள் படும் துன்பத்தை துடைக்க இங்கிருந்து குரல் கொடுக்கிறோம். அரசியல் கட்சி தலைவர்கள் போராடுகிறார்கள், அறிக்கை விடுகிறார்கள். மாணவர்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். ஆனால் நாமே கதி என்று நம்பி நம் நாட்டுக்கு வந்த இலங்கை அகதிகளை எப்படி வைத்திருக்கிறோம். இலங்கை அரசை போலவே முகாம்களில் அடைத்து…

இன்று 9 படங்கள் வெளிவருகிறது: அஞ்சானுக்கு அஞ்சிய படங்கள் களம்…

கடந்த இரண்டு வாரங்களாக அஞ்சான் வருகையையொட்டி பெரிய அளவில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் மட்டும் வெளியானது. அஞ்சானின் வீழ்ச்சி க.தி.க.வ.இயக்கத்திற்கு சாதகமாக அமைந்தது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக தேங்கி இருந்த படங்கள் நாளை வெளிவருகிறது. இன்று 6 நேரடி தமிழ்…

தமிழக அரசே ! கத்தி புலிப்பார்வை திரைப்படத்தை தடை செய்!…

2 லட்சம் அப்பாவி தமிழர்களின் இரத்தம் குடித்த கொடூரன் ராஜபக்சேயின் LYCA திரைப்பட நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படத்தை தடை செய் என இனம் காக்கும் வீரத்தமிழர்கள் , அண்ணன் பிரபாகரன் தம்பிகள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் சுவரொட்டிகள் பரவலாக  ஒட்டப்பட்டுள்ளது.  

ஐ படத்தில் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்டு!

கோலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் படங்களில் ஒன்று ஐ. விக்ரம்-ஷங்கர் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும்  படம்தான் இது. ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் அந்தியன் படம் வெளியானது. ஐ படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. 'ஐ' படத்திற்காக, இயக்குனர்…

12 மணி நேரம் மேக்கப் போட்ட விக்ரம்…!

ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஐ’ படத்திற்காக நடிகர் விக்ரம் கடுமையாக உழைத்திருக்கிறாராம். படத்தில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், பொறுப்புடனும் விக்ரம் நடித்ததாக தயாரிப்பாளர் பாராட்டியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக விக்ரம் வேறு எந்தப் படத்தையும் ஒத்துக் கொள்ளாமல் ‘ஐ’ படத்திற்காக மட்டுமே உழைத்து…

உப்புமா கம்பெனி – கதை திரைக்கதை வசனம் இயக்கம் பார்ட்-2வின்…

சமீபத்தில், பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ”கதை திரைக்கதை வசனம் இயக்கம்”. தம்பி ராமைய்யா தவிர இப்படத்தில் நடித்த அனைவரும் புதுமுகங்கள் தான். ஆனாலும் கெஸ்ட்ரோலில் ஆர்யா, விஷால், அமலாபால், டாப்சி, விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கதையே இல்லாமல் வெளிவந்த இப்படம், பெரிய வெற்றி பெற்றுள்ளது.…

உலகம் முழுவதும் 20000 திரையரங்குகளில் ‘ஐ’ ரிலீஸ்…?

சொன்னால் நம்புவீர்களா என்பதே சந்தேகம்தான்…ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள ‘ஐ’ திரைப்படம் தீபாவளி நாளான அக்டோபர் 22ம் தேதியன்று உலகம் முழுவதும் உள்ள 20000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம். அதில் சீனாவில் மட்டும் 15000 திரையரங்குகளில் வெளியாகப் போகிறதாம். இப்படத்தை…

கத்தி டீல் முடிந்து விட்டது! விஜய்-முருகதாஸ் அதிர்ச்சி!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கத்தி படத்திற்கான பிரச்னை தீர்ந்த பாடில்லை. நாளுக்கு நாள் பிரச்னை சூடு பிடித்துக்கொண்டே செல்கிறது. அதனால் படம் தீபாவளிக்கு வெளியாகிற நேரத்தில் விசயம் இன்னும் பெரிதாகி விடுமோ என்ற அச்சம் விஜய், முருகதாசுக்கிடையே ஏற்பட்டிருக்கிறது. அதனால் இந்த பிரச்னைக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைத்து…

சந்தானத்தை கழட்டி விட்ட அபிமான ஹீரோக்கள்!

வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நம்பர்ஒன் காமெடியனாக இருந்தவர் சந்தானம். அவர் காமெடியனானபோது காமெடி கதைகளே அதிகமாக வெற்றி பெற்று வந்ததால், சந்தானத்திற்கு மவுசு கூடியது. முக்கியமான முன்னணி ஹீரோக்களே அவரது கால்சீட்டுக்காக வெயிட் பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குறிப்பாக, ஜெயம்ரவி, ஆர்யா, விஷால், ஜீவா உள்பட…

காந்தி ஆங்கிலப் படத்தை இயக்கிய ரிச்சர்ட் அட்டென்பரோ காலமானார்

லண்டன், ஆக.25- இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆங்கிலப் பட நடிகரும், 1982-ல் வெளியான ‘காந்தி’ திரைப்படத்தை இயக்கியவருமான ரிச்சர்ட் அட்டென்பரோ நேற்று காலமானார். பிரிட்டைன் கலையுலகின் தனிப்பெரும் அடையாளமாக திகழ்ந்த ரிச்சர்ட் அட்டென்பரோ, மகாத்மா காந்தியின் அகிம்சை வரலாற்றை சித்தரிக்கும் ‘காந்தி’ படத்தை இயக்கியதன் மூலமாக கோடிக்கணக்கான இந்திய…

கார்த்திக்கு என்ன ஆகும்? நகத்தை கடித்த சூர்யா

தமிழ் சினிமாவில் பாலிவுட்டை போல் ஹிட் பிரதர்ஸாக இருந்தவர்கள் சூர்யா-கார்த்தி. ஆனால் இதெல்லாம் சில வருடங்களுக்கு முன் தான். தற்போது இருவருமே ஹிட் என்ற வார்த்தையை கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. சமீபத்தில் வந்த அஞ்சானும் சூர்யாவை ஏமாற்றியதால், மிகுந்த சோகத்தில் இருக்கிறாராம். இந்நிலையில் கார்த்தி நடித்த மெட்ராஸ்…

திருட்டு விசிடியை தடுக்க நேரடியாக களத்தில் இறங்கினார் பார்த்திபன்

பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படம் கடந்த ஆகஸ்ட் 15ந் தேதி வெளியானது. “இந்தப் படத்தை கஷ்டப்பட்டு எடுத்திருக்கேன். யாரும் திருட்டு விசிடி போடாதீங்க அப்படி போட்டா உங்களுக்கு ஆண்டவன் மரண அடி கொடுப்பான்” என்ற பார்த்திபன் விளம்பரம் செய்தார். உருக்கமான வேண்டுகோள் வைத்தார்.…