பிரதமர் படத்தை மிதித்ததற்காக இளம் வயதுப் பெண் மன்னிப்பு கேட்டார்

இளம் வயதுப் பெண் ஒருவர் பிரதமருடைய படத்தை மிதித்ததற்காக கைது செய்யப்பட்டு போலீஸ் தடுப்புக் காவலில் 15 மணி நேரத்துக்கு மேல் இருந்த பின்னர் அதற்காகப் பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இன்று கோலாலம்பூரில் டிஏபி தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசினார். தேச நிந்தனை செய்யும் எண்ணம்…

டாக்டர் மகாதிர்: சுதந்திரம் தானாக வந்ததாக நினைக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்

இன்றைய இளைஞர்கள் சுதந்திரம் தானாக வந்ததாகக் கருதிக்கொண்டிருக்கிறார்கள். அதுதான் அண்மையில் ‘ஜஞ்ஜி டெமோக்ராசி பேரணி’யில் கலந்துகொண்டவர்கள்  மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதற்கு காரணம் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். அதில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் பதின்ம வயதினர், இளம் நிபுணர்கள். அந்நிய ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்த அனுபவம் அவர்களுக்கு இல்லை.…

மெர்தேக்கா சர்ச்சைக்குரிய சம்பவம் : 19 வயது பெண் போலீசாரிடம்…

கோலாலம்பூரில் மெர்தேக்காவுக்கு முந்திய நாளன்று நிகழ்ந்த ஜாஞ்சி டெமாக்கரசி பேரணியின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பில் ஜோகூர் பாருவைச் சேர்ந்த 19 வயது பெண் போலீசாரிடம் சரணடைந்தார். வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக போலீசார் தேடி வந்த 11 பேரில் அவரும் ஒருவர் ஆவார். பாக்ரி எம்பி…

அருவறுப்பான சம்பவம் தொடர்பில் மாணவர் ஒருவர் கைது

மெர்தேக்கா தினத்துக்கு முதல் நாள் டாத்தாரான் மெர்தேக்காவில் சிலர் ஈடுபட்ட அருவறுக்கத்தக்க சம்பவம் தொடர்பில் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோலாலம்பூர் செராஸில் உள்ள கல்லூரியில் அந்த 19 வயது மாணவர் இன்று நண்பகல் வாக்கில் கைது செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்தின் போது அந்த மாணவர் பிரதமர்…

சிலாங்கூர் மெர்தேக்கா ‘சர்ச்சை’: பதில் அளிக்க மாநிலச் செயலாளரே சரியான…

சிலாங்கூர் மாநிலச் செயலாளர் முகமட் குஸ்ரின் முனாவி, மாநில மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களுக்கு சுல்தான் அழைக்கப்பட்டாரா இல்லையா என்பதை விளக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்தக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாட்டுக் குழுத் தலைவரான குஸ்ரினே அந்த விவகாரத்தை விளக்குவதற்குப் பொருத்தமான மனிதர் என சிலாங்கூர் பாஸ் இளைஞர் துணைத்…

Sang Saka Malaya கொடியை பறக்க விட்ட இருவரை அன்வார்…

மெர்தேக்காவுக்கு முதல் நாள் கொண்டாட்டங்களின் போது Sang Saka Malaya கொடியைப் பிடித்திருந்த இளைஞர்களை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆதரித்துள்ளார். அந்தக் கொடியை அவர்கள் பறக்க விட்டதில் எந்தத் தவறும் இல்லை. காரணம் மக்கள் மலாயாவுக்கு சுதந்திரம் கோரிய போது அந்தக் கொடி முன்மொழியப்பட்டது என அன்வார்…

Despite ban, yellow shirts swamp Dataran

The Merdeka Day eve countdown this year at Dataran Merdeka will see two activist groups join revellers, but the police are adamant they be kept at bay. Gabungan Janji, a coalition of 47 NGOs, wants…

‘மெர்தேக்கா வரவேற்பு நிகழ்வுகளுக்கு அனுமதி தேவையா ?’

டாத்தாரான் மெர்தேக்காவில் இன்றிரவு கூடுவதின் மூலம் தாங்கள் அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை மீறப் போவதாக கூறப்படுவதை ஜாஞ்சி டெமாக்கரசி ஏற்பாட்டாளர்கள் நிராகரித்துள்ளனர். வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்துவதாக தான் அளித்துள்ள வாக்குறுதியை அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அந்தக் கூட்டத்திற்குப் பின்னணியில் உள்ள 47 அரசு சாரா அமைப்புக்களைச்…

மெர்டேகா கொண்டாட்டத்தில் நஜிப்புக்குப் பக்கத்தில் கிட் சியாங்குக்கு இடமளிக்கத் தயார்

தகவல்,தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம், புக்கிட் ஜலில் அரங்கில் நடைபெறும் மெர்டேகா தினக் கொண்டாட்டத்தில் மாற்றரசுக் கட்சித் தலைவர்களுக்கு இடமில்லை என்று கூறப்படுவதை மறுக்கிறார். வெள்ளிக்கிழமை இரவுக் கொண்டாட்டத்தில் அவர்களும் தாராளமாக கலந்துகொள்ளலாம் என்கிறார் அவர். “அது உண்மையல்ல. எவரும் வரலாம். அது பிஎன் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே…

மெர்டேகா கொண்டாட்டம்:1மலேசியா சின்னத்தையே பயன்படுத்த அரசு முடிவு

இவ்வாண்டு மெர்டேகா தினக் கொண்டாட்டத்துக்கான சின்னமாக 1மலேசியா சின்னமே பயன்படுத்தப்படும் என்று தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.தொடர்ந்து மூன்றாண்டுகளாக அச்சின்னமே பயன்படுத்தப்படுகிறது. செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஆறு வெவ்வேறு சின்னங்கள்  வெளியிடப்பட்டது அந்நிகழ்வை விளம்பரப்படுத்தும் முயற்சியாகும் என்று அமைச்சின் தலைமைச் செயலாளர் கமருடின் சியாராப் கூறினார். “அவையெல்லாம் விளம்பரத்துக்காக…

ஆறு மெர்டேகா தினச் சின்னங்கள்; அரசாங்கத்துக்கே குழப்பம்

மெர்டேகா தினத்துக்கென்று அரசாங்கம் ஆறு வகை சின்னங்களை வடிவமைத்துள்ளது ஆனால், அவற்றில் அதிகாரத்துவ சின்னமாக எதைப் பயன்படுத்துவது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.இதைத் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஆறு வெவ்வேறு சின்னங்களும் கவனப்படுத்தப்பட்டு வருவதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்திருப்பதாக சீனமொழி…

ஆதாரம் தெரியாத மெர்தேக்கா சின்னம் நாளேடுகளில் வெளி வந்துள்ளது

அமைச்சின் மெர்தேக்கா சின்னத்தைக் கைவிடுவதாக தகவல், பண்பாடு, தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திம் அறிவித்து ஒரு மாதம் முடிந்து விட்ட நிலையில் கடந்த வாரம் தொடக்கம் முக்கிய நாளேடுகளில் புதிய மெர்தேக்கா சின்னம் ஒன்று காணப்படுகின்றது. புதிய சின்னத்தில் முன்னைய சின்னத்தில் இருந்ததைப் போன்ற அதே அம்சங்கள் உள்ளன.…

‘மெர்தேக்காவுக்குப் பின்னர் முதன் முறையாக குற்றச் செயல்களை முறியடிப்பது முன்னுரிமை…

அண்மைய காலம் வரையில் குற்றச் செயல்களை முறியடிப்பது அரசாங்கத்துக்கு 'ஒரு தேவையாக பார்க்கப்படவில்லை' என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறுகிறார். 1957ம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து குற்றச் செயல்களைக் குறைக்கும் விஷயம் முன்னுரிமை பெறவில்லை என நிருபர்களிடம் அவர் சொன்னார். "இப்போது குற்றச் செயல்களை முறியடிப்பதற்கு…

மசீச:பக்காத்தான் மெர்டேகா வரலாற்றைப் புறக்கணிக்கிறது

நான்கு பக்காத்தான் மாநிலங்களிலும் வெவ்வேறு கருப்பொருளில் மெர்டேகா நாள் கொண்டாடப்படுவது நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் கூட்டணியின் பங்களிப்பைக் கேலி  செய்யும் முயற்சியாகும் என மசீச கூறியுள்ளது. மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங், அம்னோ, மசீச,மஇகா ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டணி இனவேறுபாட்டை ஒதுக்கிவைத்து பொதுஇலக்கான சுதந்திரத்தைப்…

விடுதலை தினத்தில் விடுதலை கோரும் வாகன ஊர்வலம்

"மெர்டேக்கா" என்ற முழக்கத்துடன் சுமார் நூற்றுக்கும் அதிகமான வாகனமோட்டிகள் தேசிய கொடியால் அலங்கரிக்கப்பட்ட மோட்டார் வண்டிகளில் கிள்ளான் முதல் சா ஆலம் வரை ஊர்வலமாக வந்தனர். "விடுதலை தினத்தன்று எங்களுடைய கொண்டாட்டம் இது" என்கிறார் இதில் பங்குபெற்ற தமோதிரன். நேற்று காலை பண்டமாரன் மைதானத்தில் ஆரம்பித்த இந்த ஊர்வலம்,…

இன அவநம்பிக்கைக்கு இடையில் 54வது மெர்தேகா

மலேசியர்கள் இன்று 54வது மெர்தேகாவைக் கொண்டாடுகின்றனர். இனங்களுக்கு இடையிலும் சமயங்களுக்கு இடையிலும் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் வழக்கமான கோலாகலத்துடன் மலேசியர்கள் தேசிய தினத்தைக் கொண்டாடுகின்றனர். மலேசியா தனது பல பண்பாட்டு சமுதாயம் குறித்தும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பின்னணியில் சமயச் சுதந்திரம் பின்பற்றப்படுவது குறித்தும் பெருமை கொள்கிறது.…