ரோஸ்மாவின் ஜெட் விமானப் பயணத்திற்கு மக்கள் பணம்!

இம்மாதத் தொடக்கத்தில் கட்டாருக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நஜிப்பின் துணையார் ரோஸ்மா மன்சூர் அரசாங்க ஜெட் விமானத்தைப் பயன்படுத்தியது குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் துறை அமைச்சர் சகாடின் காசிம் குடைந்தெடுக்கப்பட்டார். அரசாங்க விதிகளின்படி ரோஸ்மாவுக்கு அதுபோன்ற சலுகைகள் அனுமதிக்கப்படுகின்றனவா என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பினர்.…

மலேசியா நாடாளுமன்றம் பிரிட்டீஷ் காமன்ஸ் அவையைவிட மேலானது, காசிம்

பிரிட்டீஷ் காமன்ஸ் அவையைவிட மலேசிய நாடாளுமன்றம் மேலானது ஏனென்றால் "சொரசொரப்பற்ற விவாதங்கள்" நடத்தப்படுவதற்கான வசதிகள்  தரப்பட்டுள்ளன என்று பிரதமர் துறை அமைச்சர் ஷகிடான் காசிம் கூறினார். நாடாளுமன்ற விவகாரங்களுக்கு பொறுப்பான ஷகிடான் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் இதனைக் கூறினார். பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் "மேஜைகள் கூட இல்லை", என்றாரவர். "அவர்களது…

மசீச, கெராக்கான் எம்பிகள் வெறும் ‘திண்ணை பேச்சு வீரர்கள்’

அண்மையில் கொண்டுவரப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத் திருத்தங்களை எதிர்த்து வாக்களிக்காத மசீச, கெராக்கான் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் “திண்ணைப்பேச்சு வீரர்கள்” என்று டிஏபி சாடியது. அவ்விரு கட்சித் தலைவர்களும் நாடாளுமன்றத்துக்கு வெளியில்தான் செய்தியாளர் கூட்டங்களில் எதிர்ப்புக் காட்டிப் பேசுவதிலும் அறிக்கைகள் விடுவதிலும் துணிச்சலைக் காண்பிப்பார்கள் என தைப்பிங் எம்பி இங்கா…

‘முடிவில்லா வாய்ப்புகள்’-சுலோகத்தை இஸ்ரேல்தான் மலேசியாவிடமிருந்து ‘காப்பி அடித்தது’

தேச நிர்மாணிப்புக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உருவாக்கிய  ‘முடிவில்லா வாய்ப்புகள் (Endless Possibilities)’ என்னும் புதிய சுலோகம்,  மலேசியா இஸ்ரேலிடம் ‘காப்பி’ அடித்ததல்ல. இஸ்ரேல்தான் மலேசியாவைப்  பார்த்து அப்படி ஒரு சுலோகத்தை   உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு கூறிய பிரதமர்துறை  அமைச்சர் ஷஹிடான் காசிம்,  இஸ்ரேல் மே மாதத்திலிருந்து அச்சுலோகத்தைப்…

நஜிப்பின் ராயா கொண்டாட்டதிற்கான செலவு ரிம2.88 மில்லியன் மட்டுமே!

நாடாளுமன்ற செய்தி. ரிம2.28 மில்லியன். அவ்வளவுதான். மக்களின் வரிப்பணம். வேற எவரின் பணமும் இல்லை. கடந்த ராயா கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் நஜிப்பின் அதிகாரத்துவ இல்லத்திற்குச் சென்ற 80,000 விருந்தாளிகளுக்கு அளிக்கப்பட்ட விருந்துக்கான செலவு அது. நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பதிலில் இந்தத் தகவலை பிரதமர் துறை…

முருகனின் கொலையை நாடாளுமன்றம் விசாரிக்க மகஜர்

தாப்பாவில் பிகேஆர் வேட்பாளராக போட்டியிட்ட கே.வசந்த குமாரிடம் உதவியாளராக இருந்த கே. முருகன், தேர்தலுக்கு முதல்நாள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதன் தொடர்பில் அந்தக் கொலையைப் புலன்விசாரணை செய்ய நாடாளுமன்றம் ஒரு குழுவை அமைக்க வேண்டுமென அவரின் தாயார் பி.ராஜம்மா கேட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கான மகஜர் ஒன்றை ராஜம்மா,  இன்று நாடாளுமன்ற…

தேச நிந்தனைச் சட்டம் மீதான அவசரத் தீர்மானம் தள்ளுபடி

1948ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தை இரத்துச் செய்வது மீது விவாதம் நடத்தக் கோரும் அவசரத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா தள்ளுபடி செய்தார். பாஸ் கட்சியின் சிப்பாங் எம்பி ஹனிபா மைடின் (வலம்) செவ்வாய்க்கிழமை அத்தீர்மானத்தைத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அது ஓர் அவசர…

நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது (விரிவான செய்தி)

பல மாதங்களாக வாக்காளர்களை ஊகிக்கவிட்டு வேடிக்கை பார்த்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார். இன்று காலை பேரரசரைச் சந்தித்த பின்னர், காலை மணி 11.30க்கு தொலைக்காட்சியில் நஜிப் அந்த அறிவிப்பைச் செய்தார். இனி, தேர்தல் ஆணையம் (இசி) தேர்தலுக்கான நாளை நிர்ணயம் செய்யும்.…

பங்: பாலியல் வசைச்சொற்கள் பயன்படுத்தப்படுவதற்கு ‘சினமூட்டும் பேச்சுகளே’ காரணம்

மக்களவையில் எம்பிகள் பாலியல் வசைமொழிகளைப் பயன்படுத்துவதற்கு சிலரது “ “சினமூட்டும் பேச்சுகள்” காரணமாக இருக்கலாம் என்று பிஎன் அரசுஆதரவாளர் மன்ற(பிஎன்பிபிசி)த் துணைத் தலைவர் பங் மொக்தார் ரடின் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். நிலைஆணை 36(4)-ஐ திருத்தம் செய்யும் பரிந்துரைமீதான விவாதத்தில் கலந்துகொண்ட பங் மொக்தார் (பிஎன்- கினாபாத்தாங்கான்) உத்தேச…

நாடாளுமன்றக் கூட்டம் நவம்பர் 29வரை நீட்டிப்பு

நவம்பர் 27-இல் முடிவடைய வேண்டிய 12வது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணையின் மூன்றாவது கூட்டம் மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சில சட்டவரைவுகளையும் அரசாங்க விவகாரங்களையும் இறுதி செய்வதற்கு வசதியாக அக்கூட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலை ஆணை 11(2)-இன்கீழ் மக்களவைக் கூட்டம் நீட்டிக்கப்படுவதாக அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா அறிவித்தார்.…

அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தாங்கள் சொல்வதற்குப் பொறுப்பேற்க வேண்டும்

சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் உட்பட அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தாங்கள் சொல்வதற்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும். அதிகாரிகள் தயாரித்ததையே  தாங்கள் வாசித்ததாக கூறி அவர்கள் தப்பித்துக் கொள்ளக் கூடாது என பத்து எம்பி  சுவா தியான் சாங் கூறினார். "அதிகாரிகள் தயாரிக்கும் பதிலைத் திருத்தும்…

Call for the setting up of a Human…

Media statement by M.Kula Segaran, MP for Ipoh Barat and DAP National Vice Chairman at Parliament House, Kuala Lumpur  on 23th October 2012. This morning while answering an oral question in the Parliament on the…

சம்பள வெட்டுத் தீர்மானம் நிலை ஆணைகளைக் ‘கேலி’ செய்வதுபோல் உள்ளது

அமைச்சர்களின் சம்பளத்தை வெட்ட வேண்டும் என்று மாற்றரசுக் கட்சி எம்பிகள் மூவர் கொண்டுவந்த தீர்மானங்களை அனுமதிக்க மறுத்த மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, அடையாள சம்பள வெட்டுகள் நிலைஆணை 66(9)-ஐ “கேலி செய்வதுபோலவும் மீறுவதுபோலவும்” உள்ளன என்றார். அப்படியொரு தீர்மானம் மக்களவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அதன் விளைவாக…

குவான் எங்: கணக்கறிக்கையை இன்றே தாக்கல் செய்க

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், தலைமைக் கணக்காய்வாளர் (ஏஜி) அறிக்கையை இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்திலேயே தாக்கல் செய்ய வேண்டுமாய் கூட்டரசு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அது வெளியிடப்பட்டால் மாநிலங்கள் அவற்றின் கணக்கறிக்கைகளை வெளியிட வசதியாக இருக்கும் என்றாரவர். மாநில அரசுகளின் கணக்கறிக்கை அந்தந்த அரசுகளிடம் ஆகஸ்ட் 30-இலேயே கொடுக்கப்பட்டு…

Chinese Education: Dong Zong calls for rally at…

Open Letter to the Public “926 Save Chinese Education Campaign” launched by Dong Zong Chinese education in Malaysia has been encountering numerous long-standing unresolved problems. The situation has deteriorated significantly in recent years due to…

Parliament, Statutory Rape and Children lying ?

-Charles Santiago, Member of Parliament, Klang, September 8, 2012. How many of you would believe that a seven-year-old child could whip up a fantasy of having been raped when she was aged four? And that…

லினாஸ் மீதான பிஎஸ்சி அறிக்கை மக்களவையில் தாக்கல்

லினாஸ் ஆலை மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பகாங், கெபெங்கில் உள்ள அந்த அரியமண் ஆலை மீது ஆய்வுநடத்தி பரிந்துரைகள் வழங்க மார்ச் 30-இல் அமைக்கப்பட்ட அக்குழுவுக்கு மூன்றுமாத அவகாசம் வழங்கப்பட்டது.ஆனால், அதற்கு முன்பே அது அறிக்கையைத் தயாராகிவிட்டது. ஆனால், அறிக்கையில்…

மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற கடிகாரம் முடக்கப்பட்டது

கடந்த 22 ஆண்டுகளில் நிகழ்ந்திராத வகையில் நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு 12 மணி அடித்ததும் நேர ஒட்டத்தை முடக்கியது. தேங்கியிருக்கும் மசோதாக்களையும் பிரேரணைகளையும் நிறைவேற்றுவதற்கு உதவியாக அவ்வாறு செய்யப்பட்டது. "அவையில் இருந்த இலக்கவியல் கடிகாரங்கள் அனைத்தும் நின்று விட்டன," என்று ராசா எம்பி அந்தோனி லோக் கூறினார். மக்களவைக்…

பிரதமர் முன்னாள் எம்பிகள் சந்திப்பு: நாடாளுமன்றக் கலைப்பின் அறிகுறியா?

சீன நாளேடு ஒன்றில், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பணி ஓய்வுபெற்ற பிஎன் எம்பிகளை இன்று சந்திப்பார் என்று வெளிவந்திருக்கும் செய்தி விரைவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்காக நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற வதந்திக்கு மேலும் வலுச்சேர்ப்பதுபோல் அமைந்துள்ளது. 13-வது  பொதுத் தேர்தல் தொடர்பில் சந்தித்துப் பேச எல்லா…

தீபாவளிக்கு முதல்நாள் நாடாளுமன்றக் கூட்டம் இல்லை

அக்டோபர் 25, தீபாவளிக்கு முதல்நாள் என்பதால் அன்று மக்களவை கூடாது. இதனை இன்று கேள்வி நேரத்துக்குமுன் அறிவித்த அவைத்தலைவர் பண்டிகார் அமின் மூலியா, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டதற்கிணங்க இம்முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார். தீபாவளியைக் கொண்டாடும் இந்துக்கள், தீபாவளிக்கு முதல்நாள் முன்னோர்களுக்கு (பிதுர்களுக்கு)  படையல் படைப்பார்கள், மறுநாள்…

தீபாவளிக்கு முதல் நாளும் நாடாளுமன்றம் கூடுவது மீது அதிருப்தி

தீபாவளிக்கு முதல் நாளன்று அதாவது அக்டோபர் 25ம் தேதியும் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறத் திட்டமிடப்பட்டிருப்பது குறித்து டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால் அக்டோபர் 26ம் நாள் 'திறந்த இல்ல உபசரிப்பை' நடத்துவதற்கான தங்களது ஏற்பாடுகள் பாதிக்கப்படும் என்றும் வழக்கமாக தீபாவளிக்கு முதல் நாள் நடத்தப்படும் முன்னோர்…