பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆகிய இருவரையும் விட மகாதிர் முகம்மட் மீண்டும் பிரதமர் ஆவதை மலாய்க்காரர்கள் விரும்புகின்றனர் என்பது இன்ஸ்டிடுட் டாருல் ஏசான் (ஐடிஇ) மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அந்த ஆய்வின்படி, 29 விழுக்காட்டு மலாய்க்காரர்கள் மகாதிர் பிரதமர் ஆவதை விரும்புகின்றனர். இரண்டாவது நிலையில் அன்வாரும் ஹாடியும் தலா 25 விழுக்காடுகள் பெற்றுள்ளனர்.
மலாய்க்காரர்களுள் பார்ட்டி பெரிபூமி பெர்சத்து மலேசியாவின் தலைவர் முகைதின் யாசின் 13 விழுக்காடு பெற்று மூன்றாவது நிலையில் இருக்கிறார். டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியான் ஒரு விழுக்காடு பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறார்.
ஆகஸ்ட் 26 லிருந்து செப்டெம்பர் தொடக்கம் வரையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 1,761 பேர் பங்கேற்றனர்.
சீனர் சமுதாயத்தைப் பொறுத்த வரையில், பிரதமர் பதவிக்கு லிம் கிட் சியாங் மிகப் பிரசித்திப் பெற்ற வேட்பாளர் – 42 விழுக்காட்டினரின் ஆதரவைப் பெற்றார். அவருக்கு அடுத்து அன்வார் – 32 விழுக்காடு; மகாதிர் 14 விழுக்காடு; முகைதின் 9 விழுக்காடு; ஹாடி 3 விழுக்காடு.
இந்திய சமுதாயத்தின் தேர்வு: அன்வார் 40 விழுக்காடு; மகாதிர் 33 விழுக்காடு; முகைதின் 19 விழுக்காடு; லிம் கிட் சியாங் 9 விழுக்காடு; மற்றும் ஹாடி 2 விழுக்காடு.
ஆனால், அனைத்து சமுதாயங்களையும் சேர்த்துப் பார்க்கையில் அன்வார் மூன்நிலையில் இருக்கிறார். 30 விழுக்காட்டினர் அவர் பிரதமராவதை விரும்புகின்றனர். அடுத்து, இரண்டாவது இடத்தில் 24 விழுக்காட்டுடன் மகாதிர்; முகைதின் 17 விழுக்காட்டுடன் 3 ஆவது இடத்தில்; 15 விழுக்காட்டுடன் நான்காவது இடத்தில் லிம் கிட் சியாங், கடைசியாக ஹாடி, 14 விழுக்காடு.
இந்த ஆய்வின்படி மலேசியர்களிடையே அன்வார் இப்ராகிம், சிறையில் இருந்தாலும், இன்னும் பிரசித்தி பெற்றவராக இருக்கிறார் என்று ஐடிஇயின் அரசியல் கல்வி மற்றும் ஜனநாயகம் ஆகிய பிரிவுகளின் தலைவர் ஷஹாருடின் படாருடின் கூறினார்.
பெரும்பான்மை மலேசியர்களால் விரும்பப்படும் ஒரு தலைவர் அன்வார் இப்ராஹிம் தான்.
ஏன். நஜிபை யாரும் ஆதரிக்கவில்லையா?
அன்வார் இப்ராகிம் என் தலைவர்
மூன்று திருடர்களில் யார் நல்ல திருடர் என்று கேள்வி கேட்டால்? திருடிய பங்கில் எமக்கு அதிகமாக கொடுப்பவனே நல்லவன் என்று சொல்வது போல் இருக்கின்றது ஆய்வு!
நஜிப்பின் முகமே எனக்கு பிடிக்கவில்லை .
அன்வார் நகைச்சுவை கலந்த அறிவாளி பிரதமர் . எல்லா இனத்தையும் கவர்ந்தவர் .
திருடனின் முகம் யாருக்கு பிடிக்கும்? அவ்வளவு தில்லு முள்ளு செய்து என்னமோ ஒன்றும் செய்யாத நல்ல பிள்ளை போல் நாடகம் போடும் ஈனம்.
இந்த காலகட்ட்த்தில் மகாதீர் வந்தால் நல்லது
திரும்ப வந்து 1957-க்குப் பிறகு பிறந்த அனைவரும் பூமிப்புத்ராக்களே என்றும் பூமியின் சலுகைகளை அவர்களும் அனுபவிக்கலாம் என்றும் சட்டதிருத்தம் கொண்டுவருவேன் என எழுத்துப் பூர்வ உறுதி கொடுத்தால் என் ஆதரவு உண்டு…
எல்லா அநியாயங்களையும் உறுதிப்படுத்தியதே இந்த காக்காத்திமிர்– இவனை எப்படி நம்ப முடியும்? காரியம் ஆகும் வரை காலை பிடிப்பதும் காரியம் முடிந்ததும் எட்டி உதைப்பதுதானே இந்த நாதாரிகளின் செயலாக அந்த காலத்தில் இருந்து வருகிறது?
யார் பிரதமர் ஆனாலும் தமிழர் தலைவிதி மாறப்போவது இல்லை. இந்த நாட்டில் நமது உரிமை அறியாதவரை எந்த காலத்திலும் சமுதாயம் முன்னேற்றம் அடைந்த சமுதாயமாக மாற்றமுடியாது.
அரசியல்,பொருளாதாரம்,கல்வி,பண்பாடு,காலை கலாச்சாரம் அனைத்திலும் பின்னடைத்தன சமூகமாக இருப்பது தலைவிதி. மாறவேண்டியது காலத்தின் கட்டாயம்,
இன்றைய சூழலில் மகாதிர் அடுத்தப் பிரதமர் ஆதரிப்பது இருக்கட்டும். இன்றைய சூழ்நிலைக்கு காரணமே மாமா மகாதிர்தானே !
அன்று தனது நிலையை வலுப்படுத்திக்கொள்ள மற்ற இனங்களை பலி கடாவாக்கினார்.
இன்று தனது நிலையை வலுப்படுத்திக்கொள்ள பலி கடாவாக்கின இனங்களின் ஆதரவு மிகவும் முக்கியமானதாக கருதுகிறார்.
அப்படியே மாமா மகாதிர் மீண்டும் பிரதமரானால் தனது முன்னாள் ஆட்சியில் நடைபெற்ற தவறுகளை திருத்த முயல்வாரா என்பதும் சந்தேகமே.
ஆக மொத்தத்தில் மகாதிர் பிரதமர் ஆவது எதிர்க்கட்சிகளுக்கு / மக்களுக்கு வேண்டுமானால் ஒரு மாற்றமாக இருக்கும். ஆனால் இம்மாற்றத்தினால் இந்தியர்கள் எவ்வாறு பலன் அடைவார்கள் என்பதுதான் கேள்வி.
மகாதீரின் மௌனம் சரியா !! இன்று நஜிப் நாட்டை திவாலாக்கி விடுவார் ! அரசாங்க பணம் ! மக்களின் பணம் பாழாகிறது என்று இன்று பினாத்தி கொண்டு திரியும் மகாதீரின் அன்றைய மௌனம் சரியா ! அவரின் அமைச்சரவையில் இந்தியர்களின் ஏகாதிபத்திய தலைவனாக வீட்றிருந்த ! சாதனை தலைவன் என்று தன்னை பிரகன படுத்தி கொண்ட சாமி வேலு ! இந்திய சமுதாயத்தை பொருளாதாரத்தில் இமயத்தில் கொண்டு வைக்கப்போகிறேன் என்று வர்ண ஜாலங்களுடன் வாய் சவடால் பேசி இந்திய சமுதாயம் வாயை கட்டி ! வயித்தை கட்டி ! சேமித்த பணத்தை கொடுத்ததற்கு எந்த கணக்கும் கிடையாது ! எந்த விளக்கமும் கிடையாது ! எல்லாம் பாலுங் கினட்ரில் விழுந்த கதையாகி விட்டது !! நீதி கேட்ட பங்குதாரர்கள் அடித்து உதைக்கப்பட்டு ரத்தக் காயங்களுடன் தூக்கி எறியப்பட்டு ! விரட்டி அடிக்க பட்டதெல்லாம் ! PWTC தலைநகரில் UMNO வழகத்தில் தான் ! மகாதீர் வாய் மூடி ! கண்கள் மூடி கண்டுகொள்ளாமல் தானே இருந்தார் ! அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு கொடுத்ததாக கூறப்பட்ட நிறுவனங்களின் பங்கு கூட ! தனி மனிதனுக்கு உரிமையான போது !வாயை திறக்காத மகாதீர் ! UAB பங்கு பூமி புத்ராக்களுக்கு வர வேண்டும் என்று அவரின்தளபதியை இந்தியாவிற்கு அனுப்பி ராஜிவ் காந்தியை சந்திக்க செய்தாரே !! மகாதீருக்கு இந்திய சமுதாயத்தை பட்றி எந்த அக்கறையும் இல்லையே ! தீபாவளிக்கு அவரின் அடிவருடியின் இல்லத்திற்கு வந்து ஊட்டிவிடும் கேக்கை சாப்பிட்டதோடு சரி !! அவரின் ஆச்சியின் கீழ் இந்திய சமுதாயம் என்ற ஒன்று இருப்பதே அவருக்கு தெரியாதே !! தலை நகரில் பத்துமலை என்ற ஒன்றில் லச்ச கணக்கான இந்துக்கள் கூடுகிறார்கள் என்பது கூட அவருக்கு தெரியாதே !! மகாதீரையும் !! நஜிப்பையும் !! ஒப்பிட்டு கூட்டி கழித்து பாருங்கள் !! மலேசிய இந்தியர்களுக்கு யாரால் நன்மை என்று !!