அஸ்மின்: கைது நடவடிக்கை மகாதிரிசம் திரும்புவதைக் காண்பிக்கிறது

அண்மையில் மாற்றரசுக் கட்சித் தலைவர்களும் ஜனநாயக-ஆதரவு சமூக ஆர்வலர்களும் கைது செய்யப்பட்டது, மாற்றுக்கருத்துக் கொண்டோருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்ட ‘மகாதிரிசம்’ மறுபடியும் தலையெடுப்பதற்கான அறிகுறியாகும் என பிகேஆர் கூறுகிறது. முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் காலத்தில் “சிவில் உரிமை பற்றிப் பேசியவர்கள்” தடுத்து வைக்கப்பட்டனர். நேற்று பலர் கைது செய்யப்பட்ட…

ஸாஹிட் ‘ஆணவம் பிடித்த முட்டாள்’ என அஸ்மின் வருணனை

தேர்தல் முறையில் மகிழ்ச்சி அடையாதவர்கள் வேற்று நாடுகளுக்குக் குடியேறலாம் எனச் சொன்ன  புதிய உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடியை பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி  இன்று சாடியிருக்கிறார். ஸாஹிட்டின் அறிக்கை, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உருமாற்றத் திட்டங்கள் எனக்  கூறப்படுகின்றவை 'முற்றிலும் போலியானவை' என்பதை…

மந்திரி புசார் பதவி தொடர்பில் பிகேஆர் துணைத் தலைவர் கட்சித்…

சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு யாரை முன்மொழிவது என்பதை முடிவு செய்யும் போது சிலாங்கூர் பிகேஆரின் கருத்துக்களை ஒதுக்கி விட்டதாக கட்சித் தலைமைத்துவத்தை அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி  சாடியுள்ளார். சிலாங்கூர் பிகேஆர் இணக்கம் இல்லாமல் கட்சித் தலைவர் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் பராமரிப்பு…

‘ஒவ்வொரு நாளும், வாரமும், மாதமும் பேரணி நடத்த வேண்டுமா?’

தேர்தல் மோசடிகளை வேறு வழிகளில் கையாள வேண்டும், அதனால்தான் கறுப்பு 505 பேரணியை ஆதரிக்கவில்லை என டிவிட்டரில் பதிவிட்டிருந்தாக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி இன்று  தெளிவுபடுத்தினார். பக்காத்தான் ரக்யாட் பேரணி நடத்துவதற்குப் பதிலாக தேர்தல் மோசடி பற்றிய தகவல்களைச் சேகரித்து தேர்தல் முறையீடு செய்வதில் கவனம்…

அஸ்மின்: பிகேஆர் கட்சியில் நான் தொடருவேன், மந்திரி புசார் பதவி…

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி எல்லா ஊகங்களையும் மறுத்து தாம் தொடர்ந்து கட்சியில் இருக்கப்  போவதாக அறிவித்துள்ளார். கோம்பாக் எம்பி-யாகவும் புக்கிட் அந்தாரா பாங்சா சட்டமன்ற உறுப்பினராகவும் தம்மைத் தேர்வு செய்த மக்களுடைய நம்பிக்கைக்கு தாம் துரோகம் செய்யப் போவதில்லை என்றும் அவர் சொன்னார். "தொடர்ந்து கனவு…

‘அஸ்மின் அலி பக்காத்தானை விட்டு வெளியேறத் தயாராகிறாரா?’

அன்வார் இப்ராஹிமின் வலது கரம் எனக் கருதப்படும் முகமட் அஸ்மின் அலி பிகேஆர் கட்சியிலிருந்தும்  பக்காத்தான் ராக்யாட் கூட்டணியிலிருந்தும் வெளியேறுவதற்குத் தயாராகி வருவதாகச் சொல்லப்படுகின்றது. "பக்காத்தான் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் சிலாங்கூர் ஆட்சி மன்ற இடங்கள் ஒதுக்கீடு குறித்து மனநிறைவு  கொள்ளாததால்" அவர் கூட்டணியிலிருந்து விலக விரும்புவதாக கட்சி…

பிகேஆர் துணைத் தலைவருடைய இணையத் தளம் மாசுபடுத்தப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, இன்று காலை தமது இணையத் தளம் மாசுபடுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். நேற்று பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலும் தமது முகநூல் பக்கம்  களங்கப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று காலை அஸ்மினுடைய இணையத் தளத்தைச் சோதனை செய்த போது வழக்கமான வெளிர் நீல நிறப்…

புரொஜெக்ட் ஐசி-இல் துங்குவின் பெயரை இழுக்கும் மகாதிர் ஒரு கோழை

சாபாவில் வெளிநாட்டவருக்கு அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டதை நியாயப்படுத்த முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் பெயரை இழுத்திருக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டை “பழிப்பாவத்துக்கு அஞ்சாத வரலாற்றையே புரட்டிப்போடும் சூழ்ச்சிக்காரர்” என பிகேஆர் வருணித்துள்ளது. “அரச விசாரணை ஆணையம் ஆராய்ந்து வரும் கள்ளத்தனமாக மேற்கொள்ளப்பட்ட ஐசி(அடையாள அட்டை)…

‘அடுத்த சிலாங்கூர் மந்திரி புசாராவது பற்றி அதிகம் கனவு காண…

பிகேஎன்எஸ் என்ற சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் மீது விருப்பம் போல் குற்றச்சாட்டுக்களை வெளியிடும் அளவுக்கு அடுத்த சிலாங்கூர் மந்திரி புசாராவது குறித்து விவசாய அமைச்சர் நோ ஒமார் 'அதிகம் கனவு காணக் கூடாது," என புக்கிட் அந்தாராபாங்சா சட்டமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி கூறுகிறார். பிகேஎன்எஸ் துணை…

தனிப்பட்ட அறிவிப்புகளைச் செய்ய வேண்டாம்: அஸ்மின் அலிக்கு பாஸ் எச்சரிக்கை

சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் பொதுத்தேர்தலுக்குப் பின்னர் மாற்றப்படலாம் என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியது குறித்து வருத்தம் தெரிவித்த பாஸ், பக்காத்தான் ரக்யாட் ஒன்றும் அப்படி முடிவு செய்யவில்லை என்றது. அது அஸ்மினின் சொந்த கருத்தாக இருக்கலாம் என்று தம் கட்சி கருதுவதாகக்…

பெர்சே 3.0 குழப்பத்துக்கு அன்வார், அஸ்மின் காரணம் என்கிறது கலகத்…

பெர்சே 3.0 பேரணி, அஸ்மின் அலி, அன்வார் இப்ராஹிம் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தினரிடையே உரையாற்றும் வரையில், அமைதியாக இருந்ததாக FRU என்ற கலகத் தடுப்புப் போலீஸ் படைப் பிரிவின் அதிகாரி ஒருவர் சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் பொது விசாரணையில் கூறியுள்ளார். நண்பகல்…

காலித்தை தாம் முதுகில் குத்தவில்லை என்கிறார் அஸ்மின்

 பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, தமக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிமுக்கும் இடையில் தகராறு நிலவுவதாக கூறப்படுவதை மறுத்துள்ளார். அந்த வதந்திகளை 'அவதூறுகள்' என அவர் வருணித்தார். காலித் தலைவர் என்ற ரீதியில் நல்ல முறையில் செயல்பட்டு வருவதால் தாம் அவரை தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளதாக…

பரம்பரை அரசியல் வேண்டாம் என அஸ்மின் பிகேஆர்-க்கு அறிவுரை

14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனி மனிதனுடைய அரசியல் போராட்டத்தின் விளைவாக உதயமானது பிகேஆர் கட்சி ஆகும். அது இன்னமும் அந்த மனிதரான கட்சியின் மூத்த தலைவரான அன்வார் இப்ராஹிமையே வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்தக் கட்சியில் அன்வார் மனைவி டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் கட்சித்…

அஸ்மின் அலியைப் பாதுகாத்ததாக கூறப்படுவதை முன்னாள் ஏசிஏ தலைவர் மறுக்கிறார்

1995ம் ஆண்டு அன்வார் இப்ராஹிம் உத்தரவின் பேரில் அஸ்மின் அலிக்கு எதிரான ஊழல் புகார்களை தாம் மூடியதாக வலைப்பதிவாளர் ராஜா பெத்ரா கமாருதின் கூறிக் கொள்வதை முன்னாள் ஏசிஏ என்ற ஊழல் தடுப்பு நிறுவன தலைமை இயக்குநர் ஷாபீ யாஹாயா மறுத்துள்ளார். அதற்கு மாறாக தாம் அப்போது துணைப்…

பிகேஆர் தலைவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு: கடும் பாதுகாப்பு நடவடிக்கை

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், துணைத் தலைவர் அஸ்மின் அலி மற்றும் கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் பாட்ருல் ஹிசாம் ஷஹாரின் ஆகியோர் மீது அமைதியாகக் கூடுதல் சட்ட விதிகளை மீறினர் என்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகின்றனர். கோலாலம்பூர், ஜாலான் டூத்தா பகுதிகள் போலீசாரால் சுற்றிவலைக்கப்பட்டுள்ளது. அன்வார்…

பெர்சே 3.0 தொடர்பில் அன்வார், அஸ்மின் மீது குற்றம் சாட்டப்படும்

பெர்சே 3.0 பேரணி தொடர்பில் பிகேஆர் கட்சியின் இரண்டு மூத்த தலைவர்களான அன்வார் இப்ராஹிம், அஸ்மின் அலி மீது நாளை நீதிமன்றத்தில்  குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் குற்றவியல் சட்டத்தின் 188வது பிரிவை (அது 109வது பிரிவுடனும் அதே சட்டத்தின் 34வது பகுதியும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டும்)…

“ஊதாரியான மகன்” மீது அஸ்மின் தாயார் ஆழ்ந்த வருத்தம்

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் தனிப்பட்ட வாழ்க்கை மீதான தாக்குதல்கள் தொடருகின்றன. அண்மையில் செக்ஸ் வீடியோ ஒன்றில் அவர் காணப்பட்டதாகக் கூறப்பட்டது. நேற்று அவருடைய தாயார் சே டோம் யாஹாயா தேசியத் தொலைக்காட்சியில் தோன்றி அஸ்மின் குடும்பத்துக்குள் மீண்டும் திரும்ப வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.…

குழப்பத்தைத் “தூண்டி விட்டதாக” அஸ்மின், அன்வார் மீது பத்திரிக்கைகள் பழி…

நேற்று நிகழ்ந்த மோதல்களின் போது சேதமடைந்த போலீஸ் காரின் படங்கள் இன்றைய ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பெரும்பாலும் அமைதியாக நடைபெற்ற பெர்சே 3.0 பேரணி வன்முறையில் முடிந்ததற்கு இரண்டு முக்கிய நாளேடுகள் பிகேஆர் தலைவர்களே காரணம் எனச் சுட்டிக் காட்டின. டாத்தாரான் மெர்தேக்காவுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு…

அஸ்மின்: யார் இந்த RPK எங்களுக்கு ஆணையிட?

கட்சி இந்தத் திசையில்தான் போக வேண்டும், இதைத்தான் செய்ய வேண்டும் என்று கூற ராஜா பெட்ரா கமருடினுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று பிகேஆர் கேள்வி எழுப்பியுள்ளது. “கட்சிக்குக் கட்டளை இட ராஜா பெட்ரா யார்? அவர் ஓர் உறுப்பினராகக்கூட இல்லை. நாட்டுடன் அவருக்கிருந்த தொடர்பும் அறுந்து போய்விட்டது.”…

“போலீஸ் மீது அவதூறு கூறியதற்காக அஸ்மின் விசாரிக்கப்படுகிறார்”

போலீஸ் மீது அவதூறு கூறியதாக சொல்லப்படுவது தொடர்பில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி விசாரிக்கப்படுகிறார். அந்தத் தகவலை பெரித்தா ஹரியான் நாளேட்டிடம் ஜோகூர் போலீஸ் தலைவர் முகமட் மொக்தார் முகமட் ஷரிப் உறுதி செய்தார்.  செய்தி இணையத் தளம் ஒன்றில் அஸ்மினுடைய கருத்துக்கள் வெளியானதைத் தொடர்ந்து அந்த…