கோலா குபு பஹாரு இடைத்தேர்தலுக்கு டிஏபியின் நியமிக்கப்பட்ட வேட்பாளருக்கு, ஹுலு சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரவாசிகளைச் சந்திக்க இன்று காலை முதல் நடைபயணத்தின்போது சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இருப்பினும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து பாங் சாக் தாவோவிடம் புகார் செய்வதற்கும் அவரது கட்சியை விமர்சிக்கும் வாய்ப்பையும் ஒருவர்…
போலியான செய்தி எதிர்ப்புச் சட்ட மசோதா நாளை தாக்கல் செய்யப்படும்
போலியான செய்தி எதிர்ப்புச் சட்ட மசோதா மக்களவையில் முதல் வாசிப்புக்காக நாளை தாக்கல் செய்யப்படும். போலியான செய்திக்கு எதிர்ப்புச் சட்டம் இயற்றும் கருத்தை சட்டத்துறை அமைச்சர் அஸலினா ஓத்னான் சைட் கடந்த ஜனவரியில் வெளியிட்டார். அதற்காக புத்ரா ஜெயா ஒரு சிறப்புக் குழுவை அமைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.…
எதிரணி வென்றால், பெல்டா குடியேறிகள் கடும் விளைவுகளுக்கு ஆளாவர், நஜிப்…
14 ஆவது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் பெல்டா குடியேறிகள் அவர்களுடைய செம்பனை அறுவடைகளை விற்பனை செய்வதில் பல இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பிரதமர் நஜிப் அவர்களிடம் கூறினார். அதுமட்டுமல்ல, இது தேசிய பொருளாதாரத்தின் மீதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாரவர். இதுதான் நிகழும்,…
போலீஸ்காரர்கள் அரசாங்கத்தின் கையாள்கள் அல்லர், நஜிப் கூறுகிறார்
போலீஸ்காரர்கள் அரசாங்கத்தின் கையாள்கள் என்று கூறப்படுவதை மறுத்த பிரதமர் நஜிப், அவ்வாறான குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றார். சிலர் போலீசார் அரசாங்கத்தின் கையாள்கள் என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். அது வருத்தத்திற்குரியது என்று கூறிய நஜிப், போலீசார் பெறும் சம்பளத்திற்கு அவர்கள் எதுவுமே செய்வதில்லை என்பதோடு குற்றச் செயல்கள்…
எஸ்.பி.ஆர்.-இன் தொகுதி வரையறை, பாரிசானுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக்…
தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ள தேர்தல் தொகுதி வரையறை மறுஆய்வு, பாரிசானை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளில் வெற்றிபெற வைக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஆய்வாளர் வோங் சின் ஹூவாட், இது நாடாளுமன்ற தொகுதிகள் சமநிலையை மோசமாக்கலாம் என்று ‘தி ஆஸ்திரேலியன்’ செய்தித்தாளிடம் இன்று ஓர் அறிக்கையில் கூறியிருக்கிறார்.…
அரசியல் கட்சிகளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டாம், மக்களுக்கு ரஃபீடா வேண்டுகோள்
14-வது பொதுத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், அரசியல் கட்சிகளுக்கு கடன்பட்டிருப்பதாக ஒருபோதும் உணரவேண்டாம் என்று முன்னாள் அம்னோ மகளிர் தலைவர், ரஃபீடா அஜிஸ் மக்களைக் கேட்டுக்கொண்டார். தனி மனிதர் மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடுகையில், நாட்டின் எதிர்காலம் முக்கியமானது என்று, இன்று தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.…
‘இனவாத அரசியலை நிறுத்துக’, சர்வதேச இனப் பாகுபாடு அழிப்பு தினத்தில்,…
2018, மார்ச் 21-ல் அனுசரிக்கப்பட்ட ‘சர்வதேச இனப் பாகுபாடு அழிப்பு தின’த்தை முன்னிட்டு, நேற்று மலேசிய சோசலிசக் கட்சியினர் (பி.எஸ்.எம்.) நாடு தழுவிய அளவில் இனப்பாகுபாட்டை எதிர்த்து, துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். மலேசியாவில் ஒரு நோயாகப் பரவிவரும் இனவாத அரசியலை நிறுத்த வேண்டுமென மக்கள், அரசாங்கம், அரசியல் கட்சிகள்…
உங்கள் கருத்து: சொல்வதைச் சொல்லிவிட்டுப் பிறகு மன்னிப்பு கேட்பது: எம்பி…
குண்டர்போல் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்: நெகிரி எம்பிக்கு பெட்ரியோட் கோரிக்கை கவலைகொண்டான்: நெகிரி செம்பிலான் மந்திரி புசார் (எம்பி) மாநில மக்களுக்கு பேராவமானத்தைக் கொண்டு வந்து விட்டார். எவ்வளவோ மரியாதை வைத்திருந்தேன் அவர்மீது. பெரும்பாலும் அம்னோ இளைஞர்கள் அடங்கிய கூட்டத்தில் பேசிய அவர் பிஎன் அரசாங்கத்தை …
மெட்ரிகுலேசன், ஐ.பி.தி.ஏ.-யில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி
மெட்ரிகுலேஷன் கல்லூரிகள் மற்றும் பொது உயர்க்கல்வி நிறுவனங்களில் (ஐ.பி.தி.ஏ.) இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆய்வு செய்வதாக பிரதமர் நஜிப் ரசாக் இன்று தெரிவித்தார். நாட்டின் ஐ.பி.தி.ஏ.-வில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தற்போது ஏழு விழுக்காடு இலக்கை எட்டவில்லை என்று அவர் தெரிவித்தார். "இந்திய மாணவர்களின்…
சிலாங்கூர் மந்திரி பெசார் வேட்பாளராக, பிரதமரின் சிறப்பு அதிகாரி
பாரிசான் சார்பாக சிலாங்கூர் மந்திரி பெசார் வேட்பாளர் யார் என்பது இன்னும் கேள்விக்குரியாக இருக்கும் நேரத்தில், பல்வேறு ஊகங்களும் எழும்பியுள்ளன. ஆக அண்மையில், பிஎன்னின் மந்திரி பெசாராக நியமிக்கப்படவுள்ளவர், பிரதமரின் சிறப்பு அதிகாரி இஷாம் ஜாலில் என்று பெயர் அடிப்படுகிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பட்டதாரியான இஷாம், பாஸ் கட்சியின்…
ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தும் தைரியம் எனக்கு முன்பிருந்தவர்களிடம் இல்லை, நஜிப்…
ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்துவது பற்றி 1984 ஆம் ஆண்டிலியே ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதைச் செய்வதற்கான "அரசியல் துணிவு" அப்போதைய மத்திய அரசிடம் இல்லை என்று பிரதமர் நஜிப் கூறுகிறார். ஜிஎஸ்டி ஒரு சரியான முடிவு, ஆனால் அது ஓர் அரசியல் விளைவுடன் வந்தது என்று தேசிய உருமாற்றத்…
போலியான செய்தி எதிர்ப்பு சட்டத்தை ரோஸ்மா ஆதரிக்கிறார்
போலியான செய்தி எதிர்ப்பு சட்டத்தை இயற்றுவதற்கான புத்ரா ஜெயாவின் திட்டத்தை தாம் ஆதரிப்பதாக பிரதமர் நஜிப்பின் துணைவி ரோஸ்மா மான்சூர் கூறுகிறார். "நான் அதை ஆதரிக்கிறேன் - போலியான செய்திக்கான புதிய சட்டம் - நான் அதை ஆதரிக்கிறேன்", என்று கோலாலம்பூரில் இன்று ஒரு நிகழ்ச்சியில் ரோஸ்மா…
ரோஸ் : பக்காத்தான் ஹராப்பான் பதிவை இன்னும் செயலாக்கப்படுத்த முடியவில்லை
பக்காத்தான் ஹராப்பான் பதிவை இன்னும் செயலாக்க முடியவில்லை என்பதை, மலேசியச் சங்கப் பதிவு இலாகா (ரோஸ்) இன்று உறுதிப்படுத்தியது. பக்காத்தான் ஹராப்பான் உறுப்புக் கட்சிகளில் ஒன்றான பெர்சத்து, 1966-ஆம் ஆண்டு அமைப்புகள் சட்டம், பிரிவு 14 (2) -ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள தகவல்களையும் ஆவணங்களையும் முறையாக வழங்கவில்லை என்று…
சாலையை மறுசீரமைப்பதாக அளித்த வாக்குறுதியை நஜிப் நிறைவேற்ற வேண்டும், பூர்வக்குடியினர்…
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அங்குள்ள சாலைகளை மறுசீரமைப்பு செய்வதாக கொடுத்த வாக்குறுதியை, பிரதமர் நஜிப் ரசாக் நிறைவேற்ற வேண்டுமெனக்கோரி, கேமரன் மலை, போஸ் லெஞ்சாங் பூர்வக்குடி சமூகம், இன்று மனு ஒன்றைக் கையளித்தனர். கடந்த 2016, ஆகஸ்ட் 27-ல், பஹாங், சுங்கை கோயான், போஸ் பெத்தாவ் தொடங்கி போஸ்…
மரியா சின் பிகேஆர் குடும்பத்தில் ஒருவராகி விட்டார், நூருல் இஸ்ஸா…
பெர்சேயின் முன்னாள் தலைவர் மரியா சின் அப்துல்லா இப்போது பிகேஆர் குடும்பத்தில் ஒருவர் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டதில் கட்சியின் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா இதை உறுதிப்படுத்தினார். ஆனால், மரியா கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிடுவார் என்றும் அவர்…
தொகுதி மறுசீரமைப்பு அறிக்கை: குவான் எங் அதிர்ச்சி என்கிறார், அஸ்மின்…
நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவால் வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள (மார்ச் 28 வரையில்) தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் கூறுகிறார். அதே அறிக்கையை "நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு துரோகம்" என்று வர்ணிக்கிறார் சிலாங்கூர் மந்திரி பெசார்…
உங்கள் கருத்து: துவான் இப்ராகிம், நாடு வளமாக இருக்க வேண்டும்,…
பாஸ் துணைத் தலைவர்: எதிரிகள் தோற்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வதில் என்ன தப்பு? ஹங் துவாபிஜே: பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் அவர்களே, சிலாங்கூர் பாஸ் தலைவர் அஹமட் டுசுக்கி அப்ட் ரானி அவர்களே, முஸ்லிமாக மதம் மாறியவன் என்ற முறையில் உங்களுக்கு நம் …
ஜிஎஸ்டிக்கு எதிரான ஹரப்பான் பரப்புரை ஏப்ரல் 1 இல் தொடங்கிறது
ஜிஎஸ்டி வரிக்கு எதிரான பரப்புரையை எதிர்வரும் ஏப்ரல் 1 இல் தொடங்குவதற்கு பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவமன்றம் தீர்மானித்துள்ளது. ஏப்ரல் 1 ஜிஎஸ்டி வரியை பிரதமர் நஜிப் அறிமுகப்படுத்திய மூன்றாம் ஆண்டு நிறைவு நாள். அப்பரப்புரையின் கருப்பொருள் "மக்கள் ஜிஎஸ்டியை நிராகரிக்கின்றனர்" என்பதாகும். இன்று தொடங்கி ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு…
‘என்னுடன் வாதமிடத் தயாரா?’ : ‘கிழவர்’ மகாதிர் ‘இளைஞர்’ நஜிப்புக்குச்…
டாக்டர் மகாதிர் முகம்மட் பொது விவாத மேடையில் தம்மைச் சந்திக்க வருமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு மீண்டும் ஒருமுறை சவால் விடுத்துள்ளார். தம்மிலும் 30வயது குறைந்தவரான நஜிப், முன்பு இரண்டு தடவை ‘மறைப்பதற்கு ஏதுமில்லை’ கருத்தரங்குக்கு வராமல் ஏமாற்றி விட்டதாக மகாதிர் கூறினார். “ஜூலையில் எனக்கு 93 …
14வது பொதுத் தேர்தலில் ஐஎஸ், போலிச் செய்தித் தாக்குதல்: ஐஜிபி…
போலீசார் 14வது பொதுத் தேர்தலின்போது ‘கடைசி நிமிட திடீர்த் தாக்குதல்கள்” நிகழ்த்திக் குழப்பம் விளைவிக்கக் கூடிய சுமார் ஆயிரம் தனிப்பட்டவர்களையும் அமைப்புகளையும் அடையாளம் கண்டிருப்பதாக இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பூஸி ஹருன் கூறினார். தாக்குதல்கள் சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகளைப் பரப்புதல், ஆவி வாக்காளர்கள், ஐஎஸ் …
ஜொகாரி: எந்த நாடும் ஜிஎஸ்டியை இரத்துச் செய்ததில்லை
பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட நாடுகளில் அரசாங்கங்கள் மாறியபோதும் ஜிஎஸ்டி இரத்துச் செய்யப்பட்டதில்லை என இரண்டாம் நிலை நிதி அமைச்சர் ஜொகாரி அப்துல் கனி இன்று கூறினார். முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தம்முடைய ஆட்சியில் மலேசியப் பொருளாதாரம் “ஆசியப் புலி” ஆக மாறுவதற்கு ஜிஎஸ்டி தேவைப்பட்டதில்லை …
‘போலிச் செய்தி சட்டம் வெளிநாட்டு ஊடகங்கள்மீதும் பாயுமா?’
அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போலிச் செய்திச் சட்டம் வெளிநாட்டு ஊடகங்கள்மீதும் பயன்படுத்தப்படுமா என்று புக்கிட் குளுகோர் எம்பி ராம்கர்பால் சிங் வினவியுள்ளார். வெளிநாட்டு ஊடகங்கள் 1எம்டிபி விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளன. சில ஊடகங்கள் பிரதமருக்கு அதில் தொடர்பிருப்பதாகக் கூட குற்றம் சாட்டியுள்ளன. “உத்தேச போலிச் செய்திச் …
பிஎம் ஆக முடியாத அளவுக்கு மகாதிருக்கு வயதாகி விட்டதா? நாளேடு…
வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றிபெற்றால் 93-வயதை நெருங்கும் டாக்டர் மகாதிர் முகம்மட் உலகின் முதிய தலைவராகி விடுவார். இப்போது உலகின் மிக மூத்த தலைவராக இருப்பவர் கியூபாவின் ரவுல் கேஸ்ட்ரோ. ஜூன் மாதத்தில் அவருக்கு 87 வயதாகும். மகாதிர் நாட்டின் பிரதமரானால் வயதான காலத்தில் அவரால் …
பாஸ் சிலாங்கூர் மாநில அரசைவிட்டு வெளியேறிவிடுவதே நல்லது, சேவியர்
சிலாங்கூர் மாநில அரசிலிருந்து பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், ஆட்சிக்குழு உறுப்பினர்களும் வெளியேறுவதே மேல் என்றார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார். கடந்த சனிக்கிழமை 17-3-2018 கெஅடிலான், ஜ.செ.க மற்றும் பாஸ் ஆகியவை சிலாங்கூர் மாநிலத்தில்…