"உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐந்து தோட்டங்களின் தொழிலாளர்கள் உள்ளனர். எங்களிடம் 500-க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை நாங்கள் பெற்றிருக்கிறோம்" என்று கூறும் தோட்ட மக்கள் ஒரு புதிய நிபந்தனையை முன் வைத்தனர்.. தோட்ட தொழிலாளர்களின் வீடமைப்பு பிரச்சனைக்கு…
சட்டம் 355 கூட்டத்திற்கு பாஸ் தித்திவங்சா அரங்கத்தைப் பயன்படுத்தலாம், கு…
ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் பரிபாலனம்) (திருத்தங்கள்) சட்டம் 1965 சம்பந்தப்பட்ட கூட்டத்திற்கு பாஸ் கட்சி கோலாலம்பூர் தித்திவங்சா அரங்கத்தைப் பயன்படுத்தலாம் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் கு நான் கூறியுள்ளார்.. யாராக இருந்தாலும் சரி, டாத்தாரான் மெர்தேக்காவை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். ரோஹின்யா முஸ்லிம் ஒற்றுமை ஒன்றுகூடுதல்…
பெர்சத்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிகேஆர் அதன் உறுப்பினர்களுக்கு பணம் தருகிறதா?
இன்றிரவு நடைபெறும் பெர்சத்து கட்சியின் அதிகாரப்பூர்வமான தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிகேஆர் உறுப்பினர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளதாகவும் அதற்குப் பணம் கொடுக்கப்படும் என்று கூறப்படுவதை பிகேஆர் மறுத்துள்ளது. இதை அறிவிக்கும் ஒரு போலிக் கடிதம் வலம் வந்து கொண்டிருக்கிறது. பிகேஆர் அலுவலகம் அவ்வாறான கடிதம் எதையும் வெளியிடவில்லை என்று பிகேஆரின்…
போலீஸ் லாக்கப்பில் மரணம் ஏற்படுவதைத் தவிர்க்க இருமுனை அணுகுமுறை பின்பற்றப்பட…
லோரி ஓட்டுநர் பி. சந்திரன் 2012 ஆம் ஆண்டில் போலீஸ் லாக்கப்பில் இறந்தது பற்றிய தமது 86 பக்க தீர்ப்பில் போலீசார் லாக்கப் சட்டம் 1953 ஐ பின்பற்றத் தவறிவிட்டதுதான் காரணம் என்று நீதிபதி எஸ். நந்தபாலன் கூறியுள்ளார். அச்சட்டப்படி லாக்கப்பில் அடைக்கப்பட்டிருப்பவரின் வியாதிக்கு, குறிப்பாக மனநோயால்…
பொங்கல் நல்வாழ்த்துகள்
செம்பருத்தி . கோம் அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்காமல் நாம் கொண்டாடும் பொங்கலுக்கு அர்த்தமில்லை!
மலேசிய சோசியலிஸ்ட் கட்சியின் சார்பில் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். இயற்கைக்கும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் நன்றி கூறும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் இத்திருநாளை நாம் கொண்டாடுகிறோம். ஒரு நாட்டின் அடிப்படை உணவு தேவையை விவசாயிகள் பூர்த்தி செய்கின்றனர். மேலும், பொருளாதார வளர்ச்சிக்கும் இவர்களின் பங்கு இன்றியமையாதது. ஆனால், நாட்டின்…
‘குண்டு தயாரிப்பு நிபுணன்’ என்று சந்தேகிக்கப்படும் நபர் பினாங்கில் கைது
நேற்று நிபோங் தெபால், தாமான் மினாமாவில், ஒரு வீட்டில் அதிரடிச் சோதனை நடத்திய போலீசார், குண்டு தயாரிப்பில் கில்லாடி என்று நம்பப்படும் ஓர் ஆடவனை கைது செய்தனர். அவனுடன் இருந்த ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டார். அந்த 32 வயது ஆடவன்மீது ஏற்கனவே ஆறு குற்றப்பதிவுகள் இருப்பதாகவும் அவன் …
மருத்துவமனையில் ஓவியர் லாட்
லாட் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் கேலிச்சித்திர ஓவியர் டத்தோ முகம்மட் நோர் காலிட் இன்று ஈப்போ பந்தாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இருதயப் பிரச்னை என்று தெரிகிறது. லாட்,65, இன்று காலை அம்மருத்துவமனையின் தீவிர கவனிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக அவரின் இளவல், திரைப்பட இயக்குனர், மாமாட் காலிட் …
செய்தியைத் ‘திரித்துக் கூறியதற்காக’ குவான் எங்குக்கு ரிம300ஆயிரம் இழப்பீடு கொடுக்க…
பினாங்கு உயர் நீதிமன்றம், பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் குறித்த செய்தி ஒன்றை “திரித்தும் தவறாகவும்” வெளியிட்டதற்காக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் பெர்ஹாட் (என்எஸ்டிபி) அவருக்கு ரிம300,000 கொடுக்கும்படி இன்று உத்தரவிட்டது. செலவுத் தொகையாக ரிம35,000 சேர்த்துக் கொடுக்கும்படியும் உயர் நீதிமன்ற நீதிபதி ரோசில்லா யோப் உத்தரவிட்டார்.…
சரவாக்குக்குப் புதிய சிஎம்
சரவாக் மாநிலச் சட்டப்படி இடைக்கால முதல்வர் பதவி கிடையாது என்பதால் அங்கு ஒருவர் புதிய முதலமைச்சராக இன்று பதவியில் அமர்த்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக த போர்னியோ போஸ்ட் கூறுகிறது. இது அவசரமாக செய்யப்பட வேண்டிய ஒன்று என்று தகவலறிந்த வட்ட்டாரமொன்றை மேற்கோள்காட்டிக் கூறிய அந்நாளேடு, அடினான் சதேமின் இறப்பை …
ஐஎஸ் தொடர்புடைய பொருள்கள் வைத்திருந்த எட்டு இந்தோனேசியர்கள் நாடு கடத்தப்பட்டனர்
மலேசிய போலீசார் எட்டு இந்தோனேசியர்களை நாடு கடத்தியுள்ளனர். அந்த எண்மரில் ஒருவர் அவரது கைப்பேசியில் ஐஎஸ் படங்கள் வைத்திருப்பது தெரிய வந்ததை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது. அவர்களை முதலில் கைது செய்தவர்கள் சிங்கப்பூர் அதிகாரிகள் என்றவர் தெரிவித்தார். சிங்கப்பூரின் ஊட்லண்ட்ஸ் சுங்க, குடிநுழைவுத்துறையில் பிற்பகல் …
நாடு ஆற்றல்மிகு தலைவரை இழந்து விட்டது: பிரதமர் இரங்கல்
சரவாக் முதலமைச்சர் அடினான் சதேம் இறப்பினால் நாடு திறமைமிக்க தலைவர் ஒருவரை இழந்து விட்டது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். சரவாக் மக்கள் அடினானை மிகவும் நேசித்தார்கள் அதனால் அவர்களுக்கு இது மிகப் பெரிய இழப்பாகும் என்றாரவர். “அவரது நிர்வாகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. “அவரின் …
சரவாக் சிஎம் அடினான் சதேம் காலமானார்
சரவாக் முதலமைச்சர் அடினான் சதேம் இன்று காலமானார். அவருக்கு வயது 72. அவர் அண்மையில் கோத்தா சமராஹானில், சரவாக் பொது மருத்துவமனையில் இருதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. அடினான், 2014, பிப்ரவரி-இல் அப்துல் தயிப் மஹ்மூட்டிடமிருந்து முதலமைச்சர் பதவியை ஏற்றார். அவருடைய இறப்புக்கான காரணம் இன்னும் சரியாகத் …
பினாங்கு தைப்பூசத்தில் சாயத்தை ‘ஸ்ப்ரே’ செய்வோருக்கு இராமசாமி எச்சரிக்கை
பினாங்கு இந்து அறவாரிய (பிஎச்இபி) தலைவர் பி.இராமசாமி, “தைப்பூசத்தில் குழப்பம் விளைவிக்கப் புறப்பட்டிருக்கும் ஸ்ப்ரே கும்பல்” குறித்து அடுத்த வாரம் போலீசைச் சந்தித்து பேசப் போவதாகக் கூறினார். தைப்பூசத்துக்குப் பெண்கள் ஆடை அணிந்து வரும் முறை என்றும் ஒரு பிரச்னையாக இருந்ததில்லை என்றாரவர். “இப்போது, திடீரென்று தங்களைச் சமூகக் …
சிறுவனை வீட்டில் தனியே விட்டுச் சென்ற பெண்ணுக்கு ரிம10,000 அபராதம்
தன் பராமரிப்பில் விடப்பட்டிருந்த மூன்று வயது சிறுவனை வீட்டில் தனியே விட்டுச் சென்ற பெண்ணுக்கு கோலா பிலா செஷன்ஸ் நீதிமன்றம் 10,000 ரிங்கிட் அபராதம் விதித்து 240 மணி நேரம் சமூகச் சேவை செய்யவும் உத்தரவிட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் அப்பெண் ஓராண்டுச் சிறை தண்டனையை அனுபவிக்க நேரும்.…
மலேசியப் பொருளாதாரம் 4.3விழுக்காடு வளர்ச்சி காணும்: உலகப் பொருளகம் ஆருடம்
உலகப் பொருளகம், 2017க்கான மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 விழுக்காடாக இருக்கும் என்றும் அடுத்த ஆண்டில் அது 4.5 விழுக்காடாக உயரும் என்றும் ஆருடம் கூறியுள்ளது. இவ்வட்டாரத்தில் உள்ள மூலப் பொருள் ஏற்றுமதி நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மேலோங்கும் என்று எதிர்பார்ப்பதாக அப்பொருளகம் ஓர் அறிக்கையில் கூறியது. “முடிவடைந்த …
நூர் ஜஸ்லான்: லெவி கட்டண விதிப்பு ஒத்திவைக்கப்படவில்லை
அன்னிய தொழிலாளர்களுக்கான லெவி கட்டணத்தை முதலாளிகளே செலுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறையை அடுத்த ஆண்டுக்குத் தள்ளிவைக்க அரசாங்கம் எண்ணவில்லை. “முதலாளிமார்கள் அதை ஒத்திவைக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள், 2013-இல் கேட்டுக்கொண்டதைப் போலவே. அவர்கள் லெவி கட்டுவதை விரும்பவில்லை. தொழிலாளர்கள் கொடுக்க வேண்டுமென நினைக்கிறார்கள்”, என உள்துறை துணை அமைச்சர் …
“யுஇசிக்கு அங்கீகாரம் இல்லை” என்ற எச்சரிக்கை விடவில்லை என்கிறார் முகைதின்…
பக்கத்தான் ஹரப்பான் தலைமையிலான அரசாங்கம் யுஇசி (Unified Examination Certicate) சான்றிதழை அங்கீகரிக்காது என்ற எந்த எச்சரிக்கையையும் தாம் விடுக்கவில்லை என்று பார்டி பிரிபூமி பெர்சத்துவின் தலைவர் முகைதின் யாசின் கூறினார். யுஇசிக்கு அங்கீகாரம் அளிப்பது மலேசியாவின் கல்விக் கொள்கையைப் பொறுத்திருக்கிறது என்று மட்டுமே முகைதின் யாசின்…
ரபிசி: எப்ஜிவி-யைப் பங்குச் சந்தையிலிருந்து அகற்றினால் ரிம7.8 பில்லியன் இழப்பு…
பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் (எப்ஜிபி) நிறுவனம் பங்குச் சந்தையிலிருந்து விலகிக்கொண்டால் அதற்கு ரிம ரிம7.8 பில்லியன் இழப்பு ஏற்படும் என பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கூறினார். இழப்பு எப்படி என்றால், எப்ஜிபி பங்குதாரர்களிடமிருந்து பங்குகளைத் திரும்ப வாங்குவதற்கு ரிம2.9 பில்லியன் கொடுக்க வேண்டியிருக்கும்; எப்ஜிபி-இல் முதலீடு …
ஜோ லோ திரும்பி வந்து 1எம்டிபி குறித்து விளக்கமளிக்க வேண்டும்:…
பினாங்கில் பிறந்தவரான லோ தெக் லோ அல்லது ஜோ லோ, நாடு திரும்பி 1எம்டிபியில் அவரது பங்கு என்னவென்பதை விளக்கிட வேண்டும் என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வலியுறுத்தினார். 1எம்டிபி விவகாரத்தால் மலேசியாவின் பெயர் கெட்டுப் போயுள்ளது. அதிகாரிகள் ஜோ லோ-வின் கடப்பிதழை இரத்துச் செய்ய …
மலாக்கா சிஎம்: விசாரணைக்கு உதவினேன், விசாரணை என்மீதல்ல
மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹருன், மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மலாக்காவில் பல அரசு அதிகாரிகள்மீது விசாரணை மேற்கொண்டுள்ளது என்றும் அவர்களின் விசாரணைகளுக்குத் தாம் உதவியதாகவும் இன்று கூறினார். நேற்று அவரது அலுவலகத்துக்கு எம்ஏசிசி சென்று சிஎம்மிடம் விசாரணை செய்ததாக வெளிவந்துள்ள நாளிதழ் செய்தி குறித்து அவர் விளக்கமளித்தார்.…
டிஜி: குடிநுழைவுத் துறையில் ஊழல் ‘துரோகிகள்’ இருக்கவே செய்கிறார்கள்
குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் முஸ்டபார் அலி, அத்துறையில் ஊழலில் ஈடுபடுவோர் இன்னும் உண்டு என்று கூறினார். பணியாளர்கள் அனைவரும் நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், நேற்றிரவுகூட ஒரு சம்பவத்தில் சில அதிகாரிகள் “வேறு விதமாக நடந்து கொண்டார்கள்” என்றார். “வெளியே சில “சூத்திரதாரிகளும்” உள்ளே …
சட்டம் 355 குறித்து அச்சம் தேவையில்லை- பாஸ்
சட்டம் 355 -ஆதரவுப் பேரணியில் விரும்பத்தகாத சம்பவம் எதுவும் நடக்காது என்று பாஸ் உத்தரவாதமளிக்கிறது. அது நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் நடைபெறும் ஊர்வலம் போன்றதுதான். எனவே, பிப்ரவரி 18-இல் அப்பேரணியை டட்டாரான் மெர்டேகாவில் நடத்துவதற்கு கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று …
எம்டியுசி: உரிய சம்பளம் கொடுத்தால் அன்னிய தொழிலாளர்கள் ஓடிப் போக…
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலையைவிட்டு ஓடாதிருக்க அவர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்க வேண்டும் என்று மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி) வலியுறுத்தியுள்ளது. அன்னிய தொழிலாளர்கள் ‘லெவி’யை அவர்களே செலுத்த வேண்டும் என்று மலேசிய கட்டிடக் குத்தகையாளர் சங்கம் நேற்று அறிவித்திருந்ததற்கு எதிர்வினையாக எம்டியுசி தலைமைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் இவ்வாறு கூறினார். “முதலாளிகள் …