"உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐந்து தோட்டங்களின் தொழிலாளர்கள் உள்ளனர். எங்களிடம் 500-க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை நாங்கள் பெற்றிருக்கிறோம்" என்று கூறும் தோட்ட மக்கள் ஒரு புதிய நிபந்தனையை முன் வைத்தனர்.. தோட்ட தொழிலாளர்களின் வீடமைப்பு பிரச்சனைக்கு தீர்வு…
இன்னும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்
நாளை நடைபெறவிருக்கும் பேரணிகளுக்கு முன்னதாக பல முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கைது செய்யப்படலாம் என்ற ஊகங்களும் இருக்கின்றன. சுருக்கமான பட்டியல்: 1. பிற்பகல் மணி 2.35 - சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக். 2. பிற்பகல் மணி 3.15 - பெர்சே…
போலீசார் பெர்சேயில் திடீர் சோதனை நடத்தி எதை நிருபிக்க முயல்கின்றனர்?,…
பேரணி நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு பெர்சே அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தி போலீசார் எதை நிரூபிக்க முயல்கின்றனர் என்று கெராக்கான் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் எண்டி யோங் கேள்வி எழுப்புகிறார். ஜனநாயக முறைக்கு முரணாக அரசாங்கத்தை கவிழ்க்கும் நடவடிக்களை தாம் ஆதரிக்கவில்லை என்று கூறிய…
பெர்சே தலைவர் மரியா கைது செய்யப்பட்டார்
பெர்சேயின் தலைவர் மரியா சின் மற்றும் பெர்சே அலுவலகச் செயலாளர் மன்டீப் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பிற்பகல் மணி 3.00 அளவில் புக்கிட் அமானைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழுவும் மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தின் அதிகாரிகளும் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பெர்சே அலுவலகத்தில் திடீர் சோதனை…
எதிர்ப்பு பேரணிக்கு வேறொரு நாளை தேர்ந்தெடுக்குமாறு சிவப்புச் சட்டையினரிடம் போலீஸ்…
பெர்சே பேரணிக்கு எதிரான சிவப்புச் சட்டையினரின் பேரணியை வேறொரு நாளில் நடத்துமாறு போலீஸ் சிவப்புச் சட்டையினரிடம் கூற வேண்டும் என்று பெர்சே இன்று போலீசாரிடம் கூறியுள்ளது. எதிர்ப்பு பேரணியை நடத்துவதற்கு மாற்று தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை குறிப்பிடும் கடமையை அமைதியான ஒருங்கு கூடுதல் சட்டம்…
பெர்சேக்கு வெற்றி, சிவப்புச் சட்டையினருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்
பெர்சே நவம்பர் 19-இல் மற்றுமொரு பேரணி நடத்தப்போவதாக அறிவித்ததும் அதன் இயக்கக்குழு கவலை கொண்டது. கவலை கொள்ள பல காரணங்கள் இருந்தன. நடப்பு அரசியல் நிவவரத்தையும் முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகும் 1எம்டிபி ஊழல் விவகாரத்தையும் கண்டு மலேசியர்கள் அலுத்துப் போய் விட்டனர். எதிரணியை ஆதரிப்போர்கூட கட்சிகளின் உள்போராட்டத்தைக் கண்டும் …
பெர்சே போராட்டம் “போலியானது”: நஜிப் சாடல்
பெர்சே நாளை அதன் 5வது பேரணியை நடத்தத் தயாராகிவரும் வேளையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அந்த அமைப்பின் போராட்டமே “போலியானது” என்று தம் வலைபதிவில் சாடினார். இரண்டாவது பேரணி தொடங்கி ஐந்தாவது பேரணிவரை எதிரணித் தலைவர்கள்தான் பெர்சே “கலகங்களை” முன்னின்று நடத்தி வந்துள்ளனர். “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை …
சுஹாகாம்: வன்முறையாளர்களைத் தனியே பிரித்தெடுங்கள், அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்வோரைத் தண்டிக்காதீர்
தேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) ஒரு பேரணியின் ஏற்பாட்டாளர்களும் பங்கேற்பாளர்களும் அமைதி நோக்கத்துடன் செயல்படுவார்களானால் அது அமைதிப் பேரணிதான் என்று கூறியது. பேரணிகளில் வன்முறையில் ஈடுபடுவோரை போலீசார் தனியே பிரிக்க வேண்டும் “பேரணி பங்கேற்பாளர்களை ஒட்டுமொத்தமாக தண்டிப்பதை விடுத்து வன்முறையில் ஈடுபடுவோரை மட்டும் அடையாளம் கண்டு அவர்களைத் …
ஏஜியைக் குறைகூறும் காணொளி தொடர்பில் மலேசியாகினி தலைமை செய்தியாசிரியர் மீது…
இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மலேசியாகினி தலைமைச் செய்தியாசிரியர் ஸ்டீபன் கான், கினிடிவியில் பதிவேற்றம் செய்யப்பட்டு பொதுமக்களால் பார்க்கப்பட்ட ஒரு காணொளி தொடர்பில் தம்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார். அக்காணொளி கைருடின் அபு ஹசான் நடத்திய செய்தியாளர் கூட்டத்தின் ஒளிப்பதிவு. “கைருடின்: அபாண்டி அலி …
கினிடிவிக்கு எதிரான குற்றச்சாட்டை தொடர்ந்து கைருடின் கேட்கிறார்: ஏஜி அபாண்டி…
அம்னோ முன்னாள் தலைவர் கைருடின் அபு ஹசான் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறியிருந்ததை வீடியோவில் பதிவேற்றம் செய்திருந்ததற்காக கினிடிவி நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, சட்டத்துறை தலைவர் முகமட் அபாண்டி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் கைருடின். அச்செய்தியாளர் கூட்டத்தில் 1எம்டிபி விவகாரத்தை அபாண்டி கையாண்ட…
கினிடிவி இயக்குநர்கள் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
மலேசியாகினியின் துணை நிறுவனமான கினிடிவி மற்றும் அதன் இரு இயக்குநர்கள் மீது நாளை கோலாலம்பூர் சிறப்பு சைபர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். இது கடந்த ஜூலை மாதத்தில் "மற்றொருவரை புண்படுத்தும் குற்றத்தன்மையுடைய" இரு வீடியோக்களை பதிவேற்றம் செய்தது சம்பந்தப்பட்டதாகும். இவ்விரு வீடியோக்களும் - ஒன்று மலாய் மொழியிலும்…
மலாக்கா அம்னோ ஆள்கள் சிவப்புச் சட்டை பேரணியில் கலந்து கொள்ளக்…
மலாக்கா அம்னோ தொடர்புக் குழு அதன் அடிநிலை உறுப்பினர்கள் சனிக்கிழமை பெர்சே பேரணிக்கு எதிரான சிவப்புச் சட்டைகள் பேரணியில் கலந்து கொள்ளலாம் என்று விடுத்த உத்தரவை மீட்டுக் கொள்ள வேண்டுமென அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கேட்டுக்கொண்டிருக்கிறார். “கடிதத்தை மீட்டுக்கொள்ளும்படியும் சிவப்புச் சட்டைப் …
தெரு ஆர்ப்பாட்டங்கள் நம் கலாச்சாரம்தான்: பிரதமருக்கு மரியா நினைவுறுத்து
தெரு ஆர்ப்பாட்டங்கள் நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளன என்று கூறிய பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா நாடு சுதந்திரம் பெறுவதற்குமுன் அம்னோ பிரிட்டிஷாரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தது உண்டு என்றார். இன்று காலை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெரு ஆர்ப்பாட்டங்கள் நம் கலாச்சாரமல்ல …
‘நன்கு அறியப்படாத நிறுவனங்களுடன்’ சூரிய ஆற்றல் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டது…
சூரிய ஆற்றல் நிறுவனக் குழுமம் ஒன்றுடன் டிஎன்பி செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்த தகவல்களை புத்ரா ஜெயா வெளியிட வேண்டும். அத்திட்டத்தின் மதிப்பு, ஏன் அந்த நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன என்ற விவரங்களும் வெலியிடப்பட வேண்டும். அக்குழுமத்தில் இடம்பெற்ற மூன்று நிறுவனங்களுக்கும் சூரிய ஆற்றலிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் துறையில் முன்அனுபவம் …
மொனாஷ், ‘சட்ட விரோத பேரணி’ மின்னஞ்சலுக்காக மன்னிப்பு கேட்டது
மலேசிய மொனாஷ் பல்கலைக்கழகம், “சட்ட விரோத ஒன்றுகூடல்களில்” கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கும் மின்னஞ்சல் ஒரு நினைவூட்டல்தான் என்று கூறியது. அந்த மின்னஞ்சல் எழுதப்பட்டிருந்த முறைக்காக அது மன்னிப்பு கேட்டுக்கொண்டது. “சட்டவிரோத ஒன்றுகூடல்கள் தொடர்பாக மொனாஷ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிக்கை எழுதப்பட்டிருந்த …
பேரணிகளுக்கிடையில் மோதலைத் தவிர்க்க சட்டமுண்டு: போலீசுக்கு நினைவுறுத்து
பெர்சேயும் சிவப்புச் சட்டையினரும் ஏக காலத்தில் பேரணி நடத்துவதைத் தடுக்க சட்டத்தில் இடமுண்டு என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் போலீசுக்கும் நினைவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்ப் பேரணியால் சச்சரவு மூளுமென்று நினைத்தால் அதை வேறொரு நாளில் அல்லது வேறொரு இடத்தில் நடத்துமாறு சம்பந்தப்பட்ட போலீஸ் மாவட்டத்தின் பொறுப்பதிகாரி உத்தரவிடலாம் என …
பெர்சே, சிவப்புச் சட்டையினருக்கு எதிராக வணிகர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
சனிக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் பெர்சே மற்றும் சிவப்புச் சட்டைப் பேரணிகள் எதிரானது என்று நம்பப்படும் ஒரு மனுவை மத்திய கோலாலும்பூர் பகுதியில் தொழில் செய்யும் வணிகர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அது நேற்று தாக்கல் செய்யப்பட்டதாக தெரிகிறது. அம்மனு இன்று மாலை மணி 4க்கு கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் …
சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யாதீர்: டிஏபி, அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களுக்கு…
பினாங்கு சட்டமன்றம் தொடங்கி ஒரு மணி நேரம்கூட ஆகவில்லை அவையில் குழப்படி செய்த ஒரு டிஏபி பிரதிநிதிக்கும் அம்னோ பிரதிநிதிக்கும் சட்டமன்றத் தலைவர் லாவ் சூ கியாங் கடும் எச்சரிக்கை விடுத்தார். கேள்வி நேரத்தின்போது ஆர்.எஸ்.என். ராயரும் (டிஏபி-ஸ்ரீ டெலிமா), ரோஸ்லான் சைடினும் (பிஎன் -பினாங் துங்கால்) வாக்குவாதத்தில் …
பெர்சே தினத்தன்று மகாதிர் வெளிநாட்டிலிருப்பார், ஆனால் அவரது ஆதரவு உறுதி
வரும் சனிக்கிழமை, பெர்சே 5 பேரணி நாள், முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் வெளிநாட்டில் இருப்பார். இது முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டதாகும். இருப்பினும். அவர் தமது முழு ஆதரவையும் பெர்சேயின் இலட்சியத்திற்கு அளித்துள்ளார். மேலும், பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து)வின் முழு ஆதரவும் பெர்சேயிக்கு உண்டு.…
ஜமால்: சிகப்புச் சட்டையினர் என்ன செய்வார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை
சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பெர்சே 5 பேரணியில் வேட்கையால் உந்தப்பட்டிருக்கும் அவரது ஆதரவாளர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு உத்தரவாத்ம் அளிக்க முடியாது என்று சிகப்புச் சட்டையினரின் தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் இன்று கோலாலம்பூர் பிடபுள்யுடிசிக்கு வெளியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். பெர்சே 5 பேரணி அமைதியாக…
சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களால் நிதிச் சுமை அதிகரிக்கும்: மகாதிர்…
திட்டங்களுக்காக பெருந் தொகைகளைக் கடனாகப் பெறும் புத்ரா ஜெயாவின் பழக்கத்தினாலும் ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதாலும் நாடு நொடித்துப் போகும் நிலை உருவாகும் என டாக்டர் மகாதிர் முகம்மட் எச்சரிக்கிறார். இப்படிப்பட்ட கடன்களுக்கு மலேசியர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். அக்கடன்கள் எதிர்காலத்தில் மிகப் பெரிய நிதிச் சுமையாக …
‘சட்டவிரோத பேரணி’யில் கலந்துகொண்டால் தண்டனை: மொனாஷ் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை
மொனாஷ் பல்கலைக்கழக மாணவர்கள் சட்ட விரோத பேரணிகளில் கலந்து கொண்டால் கட்டொழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரும் என அப்பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. இந்த மின்னஞ்சல் எச்சரிக்கையைப் பல்கலைக்கழகப் பதிவாளர் சுசிலா நாயர், நேற்று மாணவர்களுக்கு அனுப்பியிருந்தார். “மலேசிய சட்டங்களை மீறும் சட்டவிரோத ஒன்றுகூடலில்/ அது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் …
‘ஏழைகளை எண்ணிப் பாருங்கள்’: சிறைத் தண்டனை பெற்ற ரபிசியின் வேண்டுகோள்
பாண்டான் எம்பி முகம்மட் ரபிசி ரம்லி, தம் ஆதரவாளர்கள் தாம் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்படலாம் என்பதை நினைத்து கவலையுற வேண்டாம் என்று வலியுறுத்தினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற முறையில் தம் கடமைகளைச் சரிவர செய்திருப்பதாலும் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றி இருப்பதாலும் சிறையிலும் தம்மால் …
பெர்சே 5 டி-சட்டையில் டாக்டர் மகாதிர்: பேரணிக்கு வாரீர் என…
1 நிமிடம் 37 வினாடிகள் ஓடும் காணொளி ஒன்றில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் பெர்சே கூட்டமைப்பை விளம்பரப்படுத்த வந்தவர்போல் பெர்சே 5 டி-சட்டையில் காட்சி அளித்தார். வரும் சனிக்கிழமை பெர்சே 5 பேரணியில் மலேசியர் அனைவரும் கலந்து கொள்ள …