அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை ‘சதாம் உசேனைப்போல டிரம்பை தோற்கடிப்போம்’

டெக்ரான், டெக்ரானில் நேற்று ஈரான்–ஈராக் போர் தொடக்கத்தை நினைவுகூர்ந்து நடந்த ராணுவ அணிவகுப்பின்போது, அந்த நாட்டின் அதிபர் ஹசன் ரூஹானி ஆவேச உரை ஆற்றினார். அப்போது அவர் கூறும்போது, ‘‘ஈரானின் செல்வாக்குமிக்க ஆயுதங்கள் என்று சொன்னால் அவை, ஏவுகணைகள்தான். நமது எதிரிகளிடம் (அமெரிக்கா) இருந்து சமீபத்தில் வந்த அழுத்தத்தைத் தொடர்ந்து,…

இரான் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு; 24 பேர் பலி

டெக்ரான், ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன், ஈரானை 1980–ம் ஆண்டு ஆக்கிரமித்தார். அதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் செப்டம்பர் 22–ந்தேதி இரு நாடுகள் இடையே போர் தொடங்கியது. 8 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நா. சபையின் முயற்சியால் போர் முடிவுக்கு வந்தாலும், இது 20–ம் நூற்றாண்டில் பேரழிவை சந்தித்த போர்களில்…

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவியிலிருந்து நீக்க ஆலோசனை செய்யப்பட்டதா?

அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் அரசியலமைப்புப் பிரிவு குறித்து விவாதிக்க தூண்டியதாக வந்த அறிக்கையை அமெரிக்க துணை அட்டார்ணி ஜெனரல் ராட் ரோசன்ஸ்டைன் மறுத்துள்ளார். அமெரிக்காவின் இரண்டாவது மூத்த சட்ட அதிகாரியான ராட் ரோசன்ஸ்டைன் இந்த குற்றச்சாட்டுகள் "தவறானது என்றும் அடிப்படை ஆதாரங்கள் அற்றவை"…

டான்சானியா: படகு விபத்தில் 100 பேர் பலி

டான்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில் பல நூற்றுக்கணக்கானோரை ஏற்றிச் சென்ற ஒரு படகு கவிழ்ந்ததில் குறைந்தது 100 பேர் இறந்துள்ளனர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இந்த விபத்து குறித்து தெரிவித்த ஓர் உள்ளூர் அதிகாரி, ஏரியில் மூழ்கியவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டக்கூடும் என்று கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை விடிகாலை வரை…

ரஷ்யாவிடம் ராணுவ சாதனங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை…

ரஷ்யாவின் ராணுவ ஜெட் விமானங்களையும், ஏவுகணைகளையும் வாங்கியது தொடர்பாகசீன ராணுவம் மீது சில தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. யுக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க அரசியலில் அதன் தலையீடு இருந்ததாக கூறப்படுவது ஆகியவை தொடர்பாக ரஷ்யா மீது முன்னதாக அமெரிக்கா சில தடைகள் விதித்திருந்த நிலையில், ரஷ்ய நிறுவனத்துடன்…

இறால்களை கொல்லும் முன்பு கஞ்சா மூலம் போதையூட்டும் அமெரிக்க உணவகம்

அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்று இறால்களை கொல்லும் முன்பு அவற்றுக்கு கஞ்சா மூலம் போதையூட்டுகிறது. இறால்கள் கொதிக்கவைக்கப்படும் நீரில் கஞ்சா புகையை செலுத்துவது அவற்றைக் கொல்லும்போது உண்டாகும் வலியைக் குறைக்கும் என மெய்ன் மாகாணத்தில் இருக்கும் சார்லட்ஸ் லெஜென்டாரி லாப்ஸ்டர் பௌண்ட் எனும் அந்த உணவு விடுதியினர் கூறுகின்றனர்.…

லண்டனில் 400 உயிர்களின் மர்மக்கொலையாளி யார்?

லண்டனில் குறைடன் பகுதி உட்பட பல புறநகரப்பகுதிகளில் கடந்த 3வருடங்களில் 400க்கு மேற்பட்ட பூனைகள் தொடர்சியாகமர்மமாக கொல்லப்பட்டு வந்தன. இது ஒரு சீரியல் கில்லர் எனப்படும் தொடர் கொலையாளியின் கைவரிசையாகஇருக்கலாம் என கருதப்பட்டது. ஆரம்பத்தில் பூனைகளை கொல்லும் இந்த மர்மக் கொலையாளி அதன்பின்னர் மனிதர்களை கொலைசெய்யலாம் எனவும் ஊகங்கள்…

இந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தை தடை செய்த…

வீடு மற்றும் கடையில் வேலை செய்ய இந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தின் அங்கீகாரத்தை தடை செய்துள்ள சிங்கப்பூர் அரசு, சட்ட ரீதியாகவும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் வீடு மற்றும் கடைகளில் வேலையாளாக பணியாற்றுவது இந்தோனேசியர்கள்தான். அங்கு நிலவும் வறுமை காரணமாக சிங்கப்பூரை அவர்கள் நாடி வருகின்றனர்.…

நாப்கினுக்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் கென்ய பெண்கள் அதிர்ச்சி தகவல்

கென்யாவில் யுனிசெப் ஆய்வு மேற்கொண்டதில், வறுமையில் இருக்கும் 65 சதவீத பெண்கள் சாணிட்டரி நாப்கினிக்காக ஆண்களிடம் உறவு வைத்துக் கொள்கின்றனர். ஏனெனில் அவர்களிடம் சாணிட்டரி நாப்கின் வாங்குவதற்கு போதுமான வருமானம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கென்யாவில் இருக்கும் யுனிசெப்பின் தலைமை அதிகாரி வாட்டர் பிரபல ஆங்கில…

மலேசியாவில் விஷ சாராயம் அருந்திய 21 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் மதுபானங்கள் மீது கூடுதல் வரி காரணமாக வீடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் பிரபலமாக உள்ளது. இதனை ஆசிய நாடுகளில் இருந்து அங்கு சென்று குடியேறி உள்ள தொழிலாளர்கள் குடிக்கின்றனர். இப்படி அங்கு தலைநகர் கோலாலம்பூரிலும், செலங்கோர் மாகாணத்திலும் உள்நாட்டு சாராயம் குடித்தவர்களில் 57 பேர் மயங்கி…

வர்த்தக போர்: டிரம்ப் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் சீனா

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் மீது திங்களன்று விதித்த வரிக்கு பதிலடியாக, சுமார் 60 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு சீனா வரி விதித்துள்ளது. டிரம்ப்க்கு அரசியல் ஆதரவுள்ள மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை…

அணு ஆயுத ஒழிப்பு: “ஏவுகணை தளத்தை மூட ஒப்புக்கொண்டது வடகொரியா”

அணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளுக்காக வட கொரிய தலைநகரில் இரு நாட்டு உயர் தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது அந்த சந்திப்பின்போது, கிம் ஜாங்-உன், தனது நாட்டின் முக்கிய ஏவுகணை சோதனை மற்றும் ஏவுதளங்களை மூட ஒப்புக் கொண்டதாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.…

ஏமன் போரால் 52 லட்சம் குழந்தைகள் பட்டினியால் பாதிப்பு –…

2015-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வரும் மோதலால் ஏமன் பெரிதும் சீர்குலைந்துள்ளது. அக்காலகட்டத்தில் இந்த பகுதியை ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். மேலும் கடும் மோதல் ஏற்பட்ட சூழலில், ஏமன் அதிபர் அபடுருபூ மன்சோர் ஹாதி, நாட்டை விட்டு தப்பிச் செல்ல நேரிட்டது. ஈரானின் பிரதிநிதியாக கருதப்பட்ட ஒரு…

ரஷ்ய போர் விமானம் மாயம் – சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்..

மாஸ்கோ: சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசுப் படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் அவ்வப்போது விமான தாக்குதலும் நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் அரசு ஏவுகணைகள் மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த ஏவுகணைகளை சிரியா அரசுப் படைகள் இடைமறித்து…

அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர்: 20,000 கோடி மதிப்புள்ள…

20,000 கோடி டாலர் மதிப்புள்ள சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரிகளை விதித்துள்ளது அமெரிக்கா. இதன் மூலம் அமெரிக்கா-சீனா இடையே நடந்துகொண்டிருக்கும் வணிகப் போரை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. 6,000 பொருள்கள் மீது இந்த கூடுதல் இறக்குமதி வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே இது நடந்துகொண்டிருக்கும் அமெரிக்க-சீன வணிகப் போரில் மிகப்…

இங்கிலாந்தில் பயங்கரம் மீண்டும் நச்சுப்பொருள் தாக்குதல்..

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் வில்ட்ஷையர் மாவட்டத்தின் சாலிஸ்பரி என்னும் சுற்றுலா நகரம் அமைந்துள்ளது. இங்கிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்டேன்ஹெஞ்ச் என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்தூண்களை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சாலிஸ்பரி நகரில் குவிவது வழக்கம். இதனால் சாலிஸ்பரி நகரில் உள்ள உணவகங்களும், விடுதிகளும் வார விடுமுறை…

பிலிப்பைன்ஸ் மாங்குட் சூறாவளி: நிலச்சரிவில் சிக்கிய சுரங்க தொழிலாளர்கள்

பிலிப்பைன்ஸை கடுமையாக தாக்கிய அதிதீவிர மாங்குட் சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் உடல்களை தேடும் பணிகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பென்குவாட் மாகாணத்தில் உள்ள சுரங்க நகரான இடோகனில், ஒரே கூரைக்கு அடியில் இருந்த 32 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர். 50 அடி கீழே இடிந்த…

புளோரன்ஸ் புயல்: வரலாறு காணா வெள்ளம்; தொடர்பு அறுந்துபோன அமெரிக்க…

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை சூறையாடிவரும் புளோரன்ஸ் சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால், கடற்கரை நகரமான வில்மிங்டன் வட கரோலினா மாகாணத்தின் பிற பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள எல்லா சாலைகளும் அணுக முடியாதவையாக ஆகியுள்ளன.…

தென் சீனாவில் கரையை கடந்தது மாங்குட் சூறாவளி

பிலிப்பைன்ஸை கடுமையாக தாக்கிய அதிதீவிர மாங்குட் சூறாவளி சீனாவின் மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட குவாங்டாங் மாகாணத்தில் கரையை கடந்ததுடன் அங்கு கடும் சேதத்தை விளைவித்து வருகிறது. அந்த மாகாணத்தில் சுமார் 162 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதுடன், கடும் மழையும் பொழிந்து வருகிறது. சீனாவின் தெற்கு…

முன்னெப்போதையும் விட மோசமான நிலையை ஆப்கானிஸ்தான் அடைந்தது ஏன்?

தாலிபன் மற்றும் மற்ற தீவிரவாத குழுக்களுக்கெதிரான அமெரிக்கா தலைமையிலான ராணுவ படைகளின் போராட்டத்துக்கு இடையில், ஆப்கானிஸ்தானில் அதிகளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி தினந்தினம் வந்து கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆப்கானிஸ்தான் மோசமான நிலையை அடைந்ததற்கான காரணத்தை அலசுகிறார் பிபிசியின் தாவூத் அசாமி. வன்முறைகள் மோசமடைந்து வருகிறதா? கடந்த…

இஸ்ரேல் குகையில் 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய சாராய ஆலை

இஸ்ரேலில் ஹைய்ஃபாவுக்கு அருகில் உலகிலேயே மிகவும் பழமையான சாராய ஆலையை கண்டறிந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வரலாற்று காலத்திற்கு முந்தைய குகை ஒன்றில் இந்த சாராய ஆலை கண்டறியப்பட்டுள்ளது. அவ்வப்போது நாடோடிகளாக வாழ்ந்த வேட்டை ஆடுபவர்கள் இறந்த பின்னர், அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தி கொண்டிருந்தபோது, இந்த சாராய…

மாங்குட்: இந்த ஆண்டின் சக்திவாய்ந்த சூறாவளி பிலிப்பைன்ஸை தாக்கியது

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய சூறாவளி கடுமையான சேதங்களை உண்டாக்கியுள்ளது. இதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிபரின் அரசியல் ஆலோசகர் பிரான்சிஸ் டோலென்சியோ தெரிவித்துள்ளார். மாங்குட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சூறாவளி பிலிப்பைன்ஸின் முக்கியத் தீவான லூசான் தீவைத் தாக்கிவிட்டு மேற்கே…

குடியேறிகளை கடலில் நிறுத்தி வைக்க வலியுறுத்தல்

மீட்கப்பட்ட குடியேறிகளின் புகலிட கோரிக்கைகள் சரிபார்க்கப்படும் வரை, கடற்கரையிலேயே அவர்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஆஸ்திரியா மற்றும் இத்தாலி நாட்டின் உள்துறை அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர். கடல் வழியாக அபாயகரமான பயணத்தை மேற்கொண்டு, நூற்றுக்கணக்கான குடியேறிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வர முயற்சிக்கின்றனர். கப்பலில் முறையாக சரிபார்க்கப்பட்ட பின்னரே…