பெர்சே ஆர்ப்பாட்டக்காரருக்கு 16 மாதச் சிறை

1 bersihகடந்த ஆண்டு  பெர்சே பேரணியின்போது ஒரு போலீஸ் வாகனத்தைச் சேதப்படுத்தியதற்காகவும் ஒரு போலீஸ்காரரையும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஒருவரையும் காயப்படுத்தியதற்காகவும் 26-வயது பால்வெட்டுத் தொழிலாளர் ஒருவருக்கு கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றம்  16மாதச் சிறைத் தண்டனையும் ரிம5,500 அபராதமும் விதித்தது.

முகமட் சபுவான் மாமாட் குற்றவாளிதான் என்பதை அரசுத் தரப்பு ஐயத்துக்கிடமின்றி நிரூபித்திருப்பதாக நீதிபதி மஹ்முட் அப்துல்லா கூறினார் என த ஸ்டார் ஆன் லைன் அறிவித்துள்ளது.