காற்றின் தரம் சீரடைந்தது

apiஇன்று  காலை  நாட்டில்  பல  இடங்களில்  காற்றின்  தரம் நல்ல  நிலையில்  அல்லது  மிதமான  நிலையில்  இருந்தது.

ஆனால்,  மூன்று  இடங்களில்  மட்டும் காற்று  உடல்நலனுக்குக்  கேடு  செய்யும்  வகையில்  இருந்தது. இன்று  காலை  8 மணிக்கு  மலாக்கா  நகரம் (112),  புக்கிட்  ரம்பாய் (107)ம்  நீலாய் (103) ஆகிய  மூன்று  இடங்களிலும்   காற்றின்  தரம்  குறைந்திருந்தது.

மூவாரில்,  காலை  மணி  7க்குக்  காற்று  அரோக்கியமற்றதாகத்தான்  இருந்தது  என  சுற்றுச்சூழல்  துறை  கூறிற்று. ஆனால்,  ஒரு  மணி நேரத்தில் அது  சீரடைந்தது.

கோலாலும்பூரில்  காற்றின்  தூய்மைக்கேட்டுக்  குறியீடு  75-க்கும் 80-க்கும்  இடைப்பட்டிருந்தது. புத்ரா  ஜெயாவில் 76 ஆக  இருந்தது.

-பெர்னாமா