இன்று காலை நாட்டில் பல இடங்களில் காற்றின் தரம் நல்ல நிலையில் அல்லது மிதமான நிலையில் இருந்தது.
ஆனால், மூன்று இடங்களில் மட்டும் காற்று உடல்நலனுக்குக் கேடு செய்யும் வகையில் இருந்தது. இன்று காலை 8 மணிக்கு மலாக்கா நகரம் (112), புக்கிட் ரம்பாய் (107)ம் நீலாய் (103) ஆகிய மூன்று இடங்களிலும் காற்றின் தரம் குறைந்திருந்தது.
மூவாரில், காலை மணி 7க்குக் காற்று அரோக்கியமற்றதாகத்தான் இருந்தது என சுற்றுச்சூழல் துறை கூறிற்று. ஆனால், ஒரு மணி நேரத்தில் அது சீரடைந்தது.
கோலாலும்பூரில் காற்றின் தூய்மைக்கேட்டுக் குறியீடு 75-க்கும் 80-க்கும் இடைப்பட்டிருந்தது. புத்ரா ஜெயாவில் 76 ஆக இருந்தது.
-பெர்னாமா
நாட்டின் பொருளாதாரம் சீரடையவில்லையே? காற்று விட காசுதாம்பா இப்ப ரொம்ப முக்கியம்.