நஜிப் பதவி விலகிக் கட்சிக்காக தியாகம் செய்ய வேண்டும்: அம்னோ வனிதா தலைவர்

waஇன்று கட்சியிலிருந்து  நீக்கப்படுவார்  என  எதிர்பார்க்கப்படும்  அம்னோ  மகளிர்  தலைவர்  ஒருவர்,  கட்சியிலிருந்து  வெளியேற  வேண்டியவர்  அம்னோ  தலைவரும்  பிரதமருமான  நஜிப்  அப்துல்  ரசாக்தான்  என்றார்.

நஜிப்தான்  கட்சிக்காக  தியாகம்  செய்ய  வேண்டும்  அடிக்கடி  கூறி  வருகிறார். அதற்கேற்ப,  அவரே  பதவி  விலகி  தியாகம்  செய்திட  வேண்டும்  என கோப்பெங்  அம்னோ  மகளிர்  தலைவர்  ஹமிடா  ஒஸ்மான்  கூறினார்.

“என்னுடைய  பதவி  விலக்கலை  ஏற்க  நான்  தயாராக உள்ளேன். ஆனால், நஜிப்  பதவி  விலக  வேண்டும். அவர்தானே  எப்போதும்  தியாகம்  செய்ய  வேண்டும், சொந்த  நலன்களை  ஒதுக்கி  வைக்க  வேண்டும்  என்று  கூறி  வருகிறார்.

“எனவே, அவர்  சொந்த  நலன்களை  ஒதுக்கிவைத்துவிட்டு மலேசியர்களுக்காகவும்  அம்னோவுக்காகவும் ஏன்  தியாகம்  செய்யக்கூடாது?”, என அவர்  வினவினார்.

இன்றைய  அம்னோ உச்சமன்றக்  கூட்டத்தில்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  உள்பட  பலர்  விலக்கப்படலாம்  என  எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில்  ஹமிடாவும்  ஒருவராவார்.