இன்று கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் அம்னோ மகளிர் தலைவர் ஒருவர், கட்சியிலிருந்து வெளியேற வேண்டியவர் அம்னோ தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக்தான் என்றார்.
நஜிப்தான் கட்சிக்காக தியாகம் செய்ய வேண்டும் அடிக்கடி கூறி வருகிறார். அதற்கேற்ப, அவரே பதவி விலகி தியாகம் செய்திட வேண்டும் என கோப்பெங் அம்னோ மகளிர் தலைவர் ஹமிடா ஒஸ்மான் கூறினார்.
“என்னுடைய பதவி விலக்கலை ஏற்க நான் தயாராக உள்ளேன். ஆனால், நஜிப் பதவி விலக வேண்டும். அவர்தானே எப்போதும் தியாகம் செய்ய வேண்டும், சொந்த நலன்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கூறி வருகிறார்.
“எனவே, அவர் சொந்த நலன்களை ஒதுக்கிவைத்துவிட்டு மலேசியர்களுக்காகவும் அம்னோவுக்காகவும் ஏன் தியாகம் செய்யக்கூடாது?”, என அவர் வினவினார்.
இன்றைய அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் துணைப் பிரதமர் முகைதின் யாசின் உள்பட பலர் விலக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் ஹமிடாவும் ஒருவராவார்.
அம்மையார் அடியாட்களை வைத்துக் கொண்டு ஒரு காலத்தில் ஆடிய ஆட்டம் என்ன? பாடிய பாட்டு என்ன? பாம்பையும் “கெல்லிங்” கையும் கண்டால் முதலில் “கெல்லிங்” – கை அடித்து சாகடிக்கனும்முன்னு சட்ட சபையிலேயே சொன்னவள்தான் தானே இவள். இன்று பதவி சுகம் போன பிறகு எந்த தே.மு. நாயாவது இவளை ஏறெடுத்துப் பார்குதா?. யானைக்கொரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும் புரிஞ்சிக்கோ, புரிஞ்சிக்கோ.
அமீனோ கட்சி அமிலத்தைக் குடித்துக் கொண்டிருக்கின்றது. விஷம் மண்டைக்கு ஏறிய பிறகு அது தானாக மண்டையைப் போட்டு விடும். நமக்கு ஏன் வம்பு. கொஞ்சம் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்ப்போம்.
பிரதமர் பதவியில் கைவைக்காமல் இருந்தால் கட்சிப் பதவியைத் தியாகம் செய்யலாம்!
இவர்களுக்கு ஆண்டவன் தரும் தண்டனை.இன்னும் இருக்கிறது யார் எல்லாம் தவறு இளைதார்களோ மக்களுக்கு..கடவுள் கதவை திறந்து விட்டார்
இவர்களுக்கு ஆண்டவன் தரும் தண்டனை.இன்னும் இருக்கிறது யார் எல்லாம் தவறு இளைதார்களோ மக்களுக்கு..கடவுள் கதவை திறந்து விட்டார்,தாண்டவம் ஆட தொடங்கி விட்டார் இனி நடக்க போகிறதை நாம் பார்கபோகிறோம்….தப்ப முடியாது…
அவர் காலில் விழுந்து கெஞ்சி கேட்டுப்பாருங்கள் .
ஓநாய் பார்த்து நாய் குலைக்கிறது. தமிழனை கேவலமாக பேசினாயே உன்னை உன் கட்சியே வெறுக்கிறது பார்த்தாயா. இதுதான் உனக்கு கிடைத்த பரிசு.நீ மட்டும் அல்ல உன் கட்சியில் உன்னை போன்று இன வெறி பிடித்த உறுப்பினர்கள் நிறைய உள்ளன.அதனால்தான் நாடு முன்னெற்றம் அடைய தடுமாற்றம் ஏற்படுகிறது.அனைவரும் மலேசியர்கள் என்ற மனப்பான்மை உருவாகினால் நாடு மற்றும் அணைத்து மலேசியர்களும் முன்னேற முடியும்.