ரபிஸி கைது செய்யப்பட்டதற்கு இசாம் கண்டனம்

ezamஇரகசிய  காப்புச்  சட்டத்தின்(ஒஎஸ்ஏ)கீழ்  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி  கைது  செய்யப்பட்டதைப்  “பிற்போக்கான  செயல்”  என  முன்னாள்  செனட்டர்  முகம்மட்  இசாம்  முகம்மட்  நோர்  வருணித்திருக்கிறார்.

“ரபிஸியையோ  வேறு  எவரையுமோ  ஓஎஸ்ஏ-இன்கீழ்க்  கைது  செய்வது  தவறு. அது  பிற்போக்கான  செயலாகும்”, என  இசாம்  முகநூலில்  குறிப்பிட்டிருந்தார்.

“தேசிய  பாதுகாப்புக்கு  மிரட்டல்  என்றால்  மட்டுமே  ஓஎஸ்ஏ-யைப்  பயன்படுத்திக்  கைது  செய்ய  வேண்டும்”, என்றவர்  வலியுறுத்தினார்.