பண்டிகார்: ரபிஸியின் கைது பற்றி போலீஸ் எனக்குத் தெரியப்படுத்தி இருக்க வேண்டும்

notiபிகேஆர்  நாடாளுமன்ற  உறுப்பினர்  ரபிஸி  ரம்லியை  நாடாளுமன்றத்துக்கு  வெளியில்  ஒஎஸ்ஏ-இன்கீழ்  வாரண்டி  இன்றியே கைது  செய்யும்  அதிகாரம்  போலீசுக்கு  உண்டு  என்பதை  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  ஒப்புக்கொண்டார்.

ஆனாலும், போலீசார்  கைது  குறித்து  முன்கூட்டியே  தமக்குத்  தெரிவித்திருக்கலாம்,  அப்படிச்  செய்திருந்தால்  அதைத்  தாம்  மக்களவைக்குத்  தெரியப்படுத்துவதற்கு  வசதியாக  இருந்திருக்கும்  என்றார்.

“மேலும், நாடாளுமன்றத்துக்கு  அருகில்  கைது  நடவடிக்கை  நடந்துள்ளது.

“நாடாளுமன்றக்  கூட்டம் பாதுகாப்புடனும்  நல்லிணக்கத்துடனும்  நடப்பதை  உறுதிப்படுத்தும்  பொறுப்பு  போலீசுக்கும்  உண்டு”,  என்றாரவர்.

“சிவில்  வழக்குகளில்  நீதிமன்ற  அவமதிக்கும்   நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்குக்  கைது  செய்யப்படுவதினின்றும்  பாதுகாப்பு  உண்டு  ஆனால்  கிறிமினல்  வழக்குகளில்  அந்தப்  பாதுகாப்பு  இல்லை”, என்றும்  பண்டிகார்  கூறினார்.