கட்சித் தாவல் வதந்திகளை மறுக்கிறார் சிலாங்கூர் பிகேஆர் பிரதிநிதி

assemblyசிலாங்கூரில்   பிகேஆர்   சட்டமன்ற   உறுப்பினர்கள்   நால்வர்     கட்சிமாறி     புதிய    கூட்டணி   அரசை    அமைக்க   உதவுவார்கள்    என்று   கூறும்    செய்திகளை     வெறும் வதந்திகள்     என     செமந்தா   சட்டமன்ற   உறுப்பினர்   தரோயா   அல்வி  மறுத்தார்.

“அது  குறித்து   இதுவரை   நான்   எதுவும்   கேள்விப்படவில்லை”,  என்றவர்   கூறியதாக   சினார்   ஹரியான்    அறிவித்துள்ளது.
மந்திரி   புசார்   முகம்மட்  அஸ்மின்,  சட்டமன்றக்  கலைப்பு    குறித்து    விவாதிப்பதற்காக     அடுத்த    வாரம்   பக்கத்தான்   ஹராபான்    சட்டமன்ற   உறுப்பினர்களைச்    சந்திப்பார்      என்ற    வதந்தியையும்     தரோயா   நிராகரித்தார்.

பாஸ்   முக்தாமாரில்  (ஆண்டுக்கூட்டத்தில்)    பிகேஆருடன்   உறவுகளை   முறித்துக்கொள்ள    முடிவெடுக்கப்பட்டதை     அடுத்து   சட்டமன்றத்தைக்     கலைக்க    முடிவு    செய்யப்பட்டதாம்.

“அப்படி   எதுவும்  கிடையாது.

“அவர்  இன்றிரவு(நேற்றிரவு)    மத்திய   கிழக்குக்குப்   புறப்படுகிறார். மொரோக்கோ,   ஜோர்டான்,    எகிப்து   ஆகிய    நாடுகளில்   ஐந்து   நாள்   அலுவல்  பயணம்    மேற்கொள்வார்,  என்றாரவர்.