இரண்டாம் உலகப்போரில் நடந்த அட்டூழியம்: வீடியோவை வெளியிட்ட சியோல் நகர நிர்வாகம்

தென்கொரியாவைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களை இரண்டாம் உலகப்போர் நடந்த போது, ஜப்பான் இராணுவத்தினர் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் கடந்த 50-ஆண்டுகள் நிலுவையில் உள்ளன. இதனால் இருநாடுகளுக்கும் இடையே புதிய உறவுகளுக்கான வாய்ப்புக்கள் எழவில்லை.

இந்த விடயத்தில் தென்கொரியா அரசு சமாதானமாகப் போனாலும், மக்கள் இது தொடர்பாக அவ்வப்போது போரட்டங்களை நடத்துகின்றனர்.

ஆனால் அவர்களை சமாதனப்படுத்துவதற்கான வழிமுறைகளை தென்கொரியா அரசால் கண்டறிய முடியவில்லை.

பாலியல் அடிமைகளாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக ஜப்பான் அரசு நிதி மூலம் பல்வேறு உதவிகளை அளிப்பதாக, கடந்த ஓராண்டுக்கு முன்னர் தெரிவித்திருந்தது.

இருப்பினும் தென் கொரிய மக்கள், இந்த விடயத்தில் ஜப்பான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சியோல் நகர நிர்வாகம் தென்கொரிய பெண்களை ஜப்பான் இராணுவத்தினர் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தியது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ஜப்பான் இராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் அமெரிக்கா மற்றும் சீனக் கூட்டு இராணுவத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையின் போது, ஒரு பெண் சீன இராணுவத்தினர் ஒருவரிடம் பயத்துடனே பதில் அளித்துள்ளார்.

-lankasri.com