பாரிஸில் சற்றுமுன் கடும் பதற்றம்!! மீண்டும் குலைனடுங்கவைக்கும் தீவிரவாதிகள் !!

paris (1)பிரான்ஸின் பாரிஸில் படையினர் மீது காரால் மோதி பயங்கவரவாதத் தாக்குதல் மேற்கொண்டதில் 6 படையினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, படையினரை மோதி தாக்குதல் மேற்கொண்ட பி.எம். டபிள்யூ. வகை காரையும் தீவிரவாதத் தாக்குதலை முன்னெடுத்த கார் சாரதியையும் பாரிஸ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பாரிஸ் தி வேர்டன் லெவல்லொயிஸ் எனும் இடத்திலுள்ள படையினர் முகாமிற்குள் இருந்து அணிவகுப்பிற்காக படையினர் வெளிவந்த போதே பி.எம். டபிள்யூ. காரில் வந்த தீவிரவாதி படையினரை மோதி விட்டு சம்பவ இடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளார்.

குறித்த சம்பவத்தில் இரு படையினர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய நான்கு படையினரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த தாக்குதல் சம்பவமானது நன்கு திட்டமிடப்பட்ட செயல் என்று எவ்வித சந்தேகங்களுமின்றி நிரூபணமாகிறது என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் கலைஸ் வரை துரத்திச் சென்று சுட்ட பொலிசார்: தாக்குதல் நடத்தியவர் கைதானார் !

431

இன்று காலை பரிஸ் புறநகர்ப் பகுதியில், ராணுவத்தினர் அணி வகுப்பில் ஈடுபட்ட நேரம். அவர்களை தனது காரால் தாக்கிவிட்டு ஒரு தீவிரவாதி தப்பியோடி இருந்தார். இதில் 6 ராணுவத்தினர் காயமடைந்தார்கள். அவர்கள் அணிவகுப்பில் ஈடுபட்டவேளை. அவர்களிடம் துப்பாக்கி இருந்திருக்கவில்லை. இன் நிலையில் தப்பியோடிய தீவிரவாதி, பிரான்சின் எல்லைப் புறமான கலைஸ் என்னும் கடல் கரைப் பகுதிவரை தப்பிச் சென்றுவிட்டார்.

இருப்பினும் எப்படியோ மோப்பம் பிடித்த பொலிசார் ஹெலிகொப்டர் மூலம் அவரை துரத்திச் சென்றுள்ளார்கள். இதேவேளை அவர்கள் கொடுத்த தகவலுக்கு அமைவாக தரையில் இருந்த பொலிசார் குறித்த தீவிரவாதியின் காரை நோக்கி 5 தடவை சுட்டுள்ளார்கள். இதில் அவர் காயமடையவே. அவரை உயிரோடு கைதுசெய்து சென்றுள்ளதாக அதிர்வின் பிரான்ஸ் நிருபர் மேலும் தெரிவித்தார்.

-athirvu.com