170 ஆவது நாளாக தொடரும் போராட்டம்: அம்பாறை மாவட்ட மக்கள் ஆதரவு

தங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று ஜனாதிபதி உடனடியாக பதில் கூற வேண்டும்.

அதுவரை தங்களது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று 170 ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த, இராணுவத்திடம் கையளித்து கைது செய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தங்களது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இவர்களின் போராட்டத்துக்கு நேற்றைய தினம் அம்பாறை மாவட்ட மக்கள் சென்று அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவளித்துள்ளனர்.

-tamilwin.com

TAGS: