‘இயன்றவரை சிறப்பாக பணியாற்றியுள்ளேன்’-பெருமிதத்தில் காலிட்

igp41   ஆண்டுகள்   போலீஸ்  படையில்  பணியாற்றிவிட்டு  பணிஓய்வு   பெறும்   இன்ஸ்பெக்டர்-ஜெனரல்   அப்   போலீஸ்   காலிட்   அபு   பக்கார்,   போலீஸ்   படையில்   இயன்றவரை   சிறப்பாகப்  பணியாற்றி   வந்துள்ளதாக  பெருமையுடன்  கூறினார்.

“மிச்சம்மீதியாக   எதையும்   விட்டு  வைக்கவில்லை”.  காலிட்     இன்று  காலை   கோலாலும்பூரில்   பணி  ஒப்படைப்பு  நிகழ்வில்  உரையாற்றினார்.

புதிய   போலீஸ்   படைத்   தலைவர்   இதுவரை  பதவி  சிறப்புப் படைப்  பிரிவுத்   தலைவராக   இருந்துவந்த   முகம்மட்  புசி  ஹருன்.  புசி   போலீஸ்   படையை   வெற்றியை   நோக்கி    அழைத்துச்   செல்வார்    என்று   நம்புவதாக   காலிட்   கூறினார்.

காலிட்,  தமக்கு   ஆதரவு   கொடுத்து   வந்த   உள்துறை   அமைச்சர்    அஹமட்  ஜாஹிட்   ஹமிடிக்கு    நன்றி     தெரிவித்தார்.

விசுவாசத்துடன்  பணியாற்றி   வந்திருப்பதாகக்  கூறிய   காலிட்,  “விசுவாசத்துடன்   பணியாற்றினால் ,  இன்ஷாஅல்லாஹ்,  வெற்றி  நமக்குத்தான்”,  என்றார்.