1எம்டிபி சாட்சிகள் வாய் திறக்க அஞ்சுகிறார்களாம்

fbi1எம்டிபி-தொடர்பு   நிதிகளில்   குற்றங்கள்   எதுவும்    நிகழ்ந்திருக்கின்றனாவா   என்று  புலனாய்வு    செய்யும்    அமெரிக்க   விசாரணை   அதிகாரி   பிரச்னைகளை   எதிர்நோக்குவதாக   அமெரிக்காவின்  புளூம்பெர்க்   ஊடகம்  கூறியது.  காரணம்,    உத்தேச  சாட்சிகள்  சிலர்    வாயைத்திறந்து   பேசுவதற்கே   அஞ்சுகிறார்களாம்.

புலனாய்வுக்கு  உதவியாகவுள்ள   “குறிப்பிட்ட    நாடுகளில்  உள்ள”  சிலர்  தங்கள்   சுயப்  பாதுகாப்பு    குறித்து    பயப்படுகிறார்கள்,  மற்றும்  சிலர்   ஒத்துழைப்பது   ஆபத்து   என   ஒதுங்கிக்  கொள்கிறார்கள்  என   கூட்டரசு   புலனாய்வுத்துறை  (எப்பிஐ) நேற்று   லாஸ்   ஏஞ்சல்சில்   கூட்டரசு  நீதிமன்றத்தில்   ஒரு  மனுவைப்  பதிவு   செய்தபோது  கூறியது.