பாஸுடன் பேச்சுகள்: கூட்டு முடிவுகளை மதிப்பவர் அன்வார்

pkrபிகேஆர்   நடப்பில்   தலைவர்    அன்வார்  இப்ராகிம்    கூட்டு   முடிவுகளுக்கு  மதிப்பளிப்பவர்   என்கிறார்   பிகேஆர்   தலைமைச்   செயலாளர்    சைபுடின்   நசுத்தியோன்  இஸ்மாயில்.

சிறையில்   உள்ள     அன்வார்   இப்ராகிம்  எழுதிய     கடிதம்   பாஸுடன்   தேர்தல்  உடன்பாடு   செய்துகொள்ளும்   பேச்சுகள்  தொடர்வதற்கு   ஆதரவு    தெரிவிப்பதுபோல்   காணப்படுவது  பற்றி   கருத்துரைத்தபோது   சைபுடின்   அவ்வாறு   கூறினார்.

பாஸுடன்  பேச்சுகளை   நிறுத்த    பக்கத்தான்   ஹரபான்  தலைவர்    மன்றம்    முடிவு  செய்த   நான்கு   நாள்களுக்குப்  பின்னர்  அக்கடிதம்   வந்தது.

“அவரைப்  பற்றி   அறிந்ததால்   சொல்கிறேன்,  கூட்டு  அடிப்படையில்   எடுக்கப்படும்   முடிவை  மதிப்பவர்   அன்வார்.

“ஹராபான்  (பாஸுடன்  பேச்சை  நிறுத்தும்)   முடிவை   அவர்  புரிந்து  கொள்வார்”,  என  சைபுடின்  இன்று  பிற்பகல்   ஓர்   அறிக்கையில்   கூறினார்..