மாட் தயிப்: சிலாங்கூர் பிரதிநிதிகளை அம்னோவுக்கு அழைத்துவர திட்டமிடவில்லை

முன்னாள்  சிலாங்கூர்  மந்திரி   புசார்   முகம்மட்  முகம்மட்   தயிப்,   தாம்  அம்னோவில்  மீண்டும்  சேர  முடிவு  செய்தபோது  கூடவே      மாநிலச்   சட்டமன்ற   உறுப்பினர்கள்   எண்மரையும்  கூடவே  அழைத்து   வரத்   திட்டமிடவில்லை   என்று  கூறினார்.

அப்படிப்பட்ட  கதையைக்   கட்டிவிட்டது  யார்    என்பது   தமக்குத்   தெரியாது   என்றாரவர்.

“நான்தான்   அம்னோவில்   மீண்டும்    சேர   விரும்பினேன். கூடவே   யாரையும்   அழைத்து  வரத்   திட்டமிடவில்லை”,  என  இன்று  காலை    செய்தியாளர்   கூட்டமொன்றில்  முகம்மட்   கூறினார்.