மகாதிர்: துங்குவின் அம்னோ சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது; இன்றைய அம்னோ நாட்டை அடகு வைக்கிறது

 

நாட்டிற்குச் சுதந்திரம் பெற்றுத்தந்ததில் கட்சியின் பங்கு பற்றி அம்னோ தலைவர்கள் தற்பெருமை அடித்துக்கொள்கிறார். ஆனால், இன்றைய அம்னோ அதற்கு எதிர்மாரானதைச் செய்கிறது என்று மகாதிர் கூறுகிறார்.

“இன்றைய அம்னோவிலிருக்கும் கயவர்களைப் போன்றவர்களால் சுதந்திரத்தைப் பெற்றிருக்கவே முடியாது. நல்லகாலமாக, அதை துங்கு அப்துல் ரஹ்மான் வழி நடத்தினார்.

“அதை இன்றுபோல் நஜிப் வழிநடத்தி இருந்தால், நாம் இன்னொரு நாட்டிற்கு சொந்தமாகி இருப்போம், ஏனென்றால் அவர் வாங்கியுள்ள பெருங்கடனை நம்மால் கொடுக்க முடியவில்லை”, என்று மகாதிர் அவரது முகநூல் வீடியோவில் பதிவேற்றம் செய்துள்ளார். .

புத்ரா ஜெயாவிலுள்ள ஒரு தேசியப்பள்ளியில் அம்னோ கொடிகளை பறக்க விட்டு அப்பள்ளியின் மாணவர்களை அக்கட்சியின் பாடலை பாட வைத்த நிகழ்ச்சி பற்றி கருத்துரைக்கையில் மகாதிர் இவ்வாறு கூறினார்.

“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்றும் தற்போதைய அம்னோ தலைவர்களால் இன்றைய அம்னோ தூய்மையில்லாததாக ஆக்கப்பட்டுள்ளது”, என்றாரவர்.