அரசியல் தீர்வைக் காணுவதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை தவற விடமாட்டோம்: மாவை சேனாதிராஜா

“அரசியல் தீர்வினைக் காணுவதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை தவற விட மாட்டோம்.

அதுபோல, கொள்கைகளிலிருந்தும் விலக மாட்டோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மாவை சேனாதிராஜா மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “புதிய அரசியலமைப்புக்கான வழிநட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையில், இணக்கம் காணப்பட்ட மற்றும் இணக்கம் காணப்படாத விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும், இறுதி அறிக்கை இன்னமும் வெளிவரவில்லை. இந்த ஆண்டு இறுதியில் நாட்டில் பல மாற்றங்கள் நிகழவுள்ளன. சில விடயங்களுக்காக கிடைக்கவுள்ள தீர்வினைத் தவறவிடக்கூடாது.” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: