தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழிலும், வவுனியாவிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும்,

அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

இன்று முற்பகல் 10.00 மணி முதல், யாழ். நகரிலுள்ள பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதுபோல, வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பேருந்து நிலையம் முன்பாக இன்று முற்பகல் 11.00 மணியிலிருந்து ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு உட்பட அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

-puthinamnews.com

TAGS: