தமிழ் அரசியல் கைதிகள் மூவர் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் 15வது நாளாக இன்றும் தொடர்கிறது!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன்,

கணேசன் தர்ஷன் ஆகிய மூவரும் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று திங்கட்கிழமை 15வது நாளாகவும் தொடர்கின்றது.

அவர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளமையால், இன்றையதினம் அநுராதபுரம் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகளில் அவர்கள், கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிகின்றது.

கடந்த எட்டு ஆண்டுகளாக அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த மூவருக்கும் எதிராக 2013ஆம் ஆண்டு முதல் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

ஆனால், சில காலத்துக்கு முன்னர், குறித்த மூவருக்கும் எதிரான வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் அநுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

-puthinamnews.com

TAGS: