197 இலங்கையர்களை அழைத்துவர ஏற்பாடு

அவுஸ்ரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்டு, தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள, இலங்கையர்கள் 197 பேரையும் இலங்கைக்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறானவர்கள், நவ்றூ, பபுவா நியூகினியா, அவுஸ்திரேலியா மற்றும் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்மஸ் தீவில் 12 பேரும், பபுவா நியூகினியாவில் 21 பேரும், அவுஸ்ரேலியாவில் 70 பேரும், நவ்றூவில் 94 பேரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், இலங்கையர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னரே, அவரை இலங்கைக்கு அழைத்துவர முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

-tamilmirror.lk

TAGS: