கெவின் மொரெஸ் கொலை: குற்றம் சாட்டப்பவர்கள் தற்காப்புவாதம் செய்ய உத்தரவிடப்பட்டனர்

 

அரசு தரப்பு வழக்குரைஞர் கெவின் மொரெஸ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ முன்னாள் நோய்க்குறி ஆய்வாளர் டாக்டர் ஆர். குணசேகரன் மற்றும் ஐவர் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் தற்காப்புவாதம் செய்ய கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அந்த அறுவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு போதிய அடிப்படை சாட்சியங்களால் நிரூபித்துள்ளது என்று நீதிபதி அஸ்மான் அப்துல்லா கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள்: ஆர். தினேஸ்வரன், 25, எகே தினேஸ் குமார், 24, எம். விஸ்வநாத், 27, எஸ். நிமலன், 24, எஸ். ரவிச்சந்திரன், 46, மற்றும் ஆர். குணசேகரன்.