சரவணனுக்கு எதிராக தமிழ் மலர் அவதூறு வழக்கு: ரிம50 மில்லியன் கோருகிறது

 

இளைஞர் மற்றும் விளையாட்டுகள் துறை துணை அமைச்சர் எம். சரவணனுக்கு எதிராக தமிழ் மலர் நாளிதழ் அவதுறு வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த நாளிதழின் உரிமையாளர் சிட்டி டீம் மீடியா செண்ட். பெர்ஹாட் அந்த வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பதிவு செய்தது.

தமிழ் மலர் “போலியான செய்திகளை” உருவாக்குகிறது என்று சரவணன் தெரிவித்தாக கூறப்படும் கருத்து மலேசியாகினி, மக்கள் ஓசை மற்றும் முகநூல் நேரடி நிகழ்ச்சி ஆகியவற்றில் வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதி அல்லது அவரது ஏஜென்டுகள் அவதூறானவை என்று கூறப்படும் சொற்களை மீண்டும் கூறுவதற்கு தடைவிதிக்கும் நீதிமன்ற உத்தரவுக்கும் வாதி மனு செய்துள்ளார்.

வழக்கு நிர்ணயத்திற்கு டிசம்பர் 18 ஆம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.