ஹிந்துப் பெண்களை காதலித்தால், இளைஞர்களுக்கு பணம்..! அதிர வைக்கும் பின்னணி..

ஹிந்துப் பெண்களை காதலித்து, அவர்களை மதமாற்றம் செய்வதற்கு, இளைஞர்களுக்கு பணம் தரப்படுகிறது’ என, ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. ஹிந்துப் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதலித்து, மதமாற்றம் செய்து திருமணம் செய்யும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளதாக, பரவலாக குற்றச்சாட்டுள்ளது. இதை,’லவ் ஜிகாத்’ என்கின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், ஹிந்து மதக் கண்காட்சி நடந்து வருகிறது. இதில் அனைத்துப் பள்ளி மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என, மாநிலக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அந்தக் கண்காட்சியில், ‘லவ் ஜிகாத்’ குறித்தும், அதில் இருந்து ஹிந்து பெண்களை காப்பாற்றுவது எப்படி என்றும் பல கையேடுகள் வழங்கப் படுகின்றன.

கல்வித் துறை சார்பிலும், மற்ற அமைப்புகள் சார்பிலும், இந்தக் கையேடுகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் கூறப் பட்டுள்ளதாவது:மாணவியரின் போன்களை, பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்கள் யார், யாருடன் பழகுகின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். ஹிந்துப் பண்டிகளை மிக் சிறப்பாக கொண்டாடுவதன் மூலம், ஹிந்து மதத்தில் இருந்து மாறுவதை தடுக்க முடியும்.

ஒரு ஹிந்துப் பெண்ணை முஸ்லிமாக மதமாற்றம் செய்வதற்காக, முஸ்லிம் இளைஞர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் தரப்படுகிறது. இவ்வாறு மதமாற்றம் செய்யப்படும் பெண்களை விற்பது, கொலை செய்வது போன்றவை நடக்கின்றன. அதனால் ஹிந்து பெற்றோர்களும், மாணவிகளும், பெண்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அந்தக் கையேடுகளில் கூறப்பட்டுள்ளன.

-athirvu.com

TAGS: