மகாதிரின் விருதுகள் திருப்பிக் கொடுக்கப்பட்டது பற்றி சிலாங்கூர் அரண்மனை அறிக்கை வெளியிடும்

 

சிலாங்கூர் சுல்தானிடமிருந்து முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் பெற்ற இரண்டு விருதுகளை அவர் திருப்பிக் கொடுத்து விட்டதாக வெளிவந்துள்ள அறிக்கைகளைத் தொடர்ந்து சிலாங்கூர் அரண்மனை ஓர் அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விருதுகள் திருப்பிக் கொடுக்கப்பட்டிருப்பதை நாங்கள் உறுதிப்படுத்தியதும் நாங்கள் ஓர் அறிக்கை வெளியிடுவோம் என்று சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முகம்மட் முனிர் பானி இன்று ஷா அலாமில் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை மகாதிர் அந்த இரு விருதுகளைத் திருப்பிக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இது பூகிஸ் சமூகம் பற்றி மகாதிர் கூறியிருந்த கருத்தால் அரண்மனை கோபமடைந்தது சம்பந்தப்பட்டதாகும்.

டாக்டர் மகாதிரின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மாவும் அவருக்கு அளிக்கப்பட்ட மாநில விருதுகளைத் திருப்பிக் கொடுத்து கொடுத்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.