பிஎன் வெற்றி பெறுவதை உறுதிசெய்வோம், கிளாந்தான் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் உறுதிமொழி

எதிர்வரும் பொதுத் தேர்தலில், கிளாந்தானில் பிஎன் வெற்றிபெறுவதை உறுதிசெய்ய, மாநிலத்தின் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் முதல்வர்களும் தங்களை அர்ப்பணிக்கவுள்ளதாக இன்று உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

இன்று கிளாந்தானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மாநில பிஎன் தலைவர் முஸ்தப்பா முகமட் முன்னிலையில் அவர்கள் இந்த உறுதிமொழியை எடுத்துகொண்டனர்.

இன்று, மாநிலக் கல்வி இலாகாவின் மண்டபத்தில், மாநிலக் கல்வியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நன்றி கூறும் விழாவில், தலைமையாசிரியர்களும் முதல்வர்களும் எழுந்து நின்று, “துகார்! கிளாந்தான்! தாவான்! கிளாந்தான்! உபா! கிளாந்தான்!,” என்று  உற்சாகத்துடன் முழக்கமிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாநிலக் கல்வி இலாகாவின் இயக்குநர் முகமட் ஷஹாரி ஒத்மானும் கலந்துகொண்டுள்ளார்.

சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சருமான, முஸ்தாப்பா தனது உரையில், ஜிஇ14-இல் மத்திய அரசாங்கத்தின் தலைமையுடன் கல்வியாளர்கள் இணைந்து பணியாற்றுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், கடந்த 28 ஆண்டுகளாக, பாஸ் தலைமைத்துவத்தின் கீழ், கிளாந்தானில் பெரியதாக வளர்ச்சி ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.