நஸ்ரி: நாடாளுமன்றம் ஏப்ரலில் கலைக்கப்படலாம்

14வது  பொதுத்   தேர்தல்   தேதி  குறித்து   பல    ஆருடங்கள்  கூறப்பட்டு  வருகின்றன. பொதுத்   தேர்தலுக்கு     முன்னதாக   நாடாளுமன்றம்    கலைக்கப்பட    வேண்டும்.அம்னோ  உச்சமன்ற   உறுப்பினர்     முகம்மட்  நஸ்ரி  அப்துல்   அசீஸ்   நாடாளுமன்றம்  ஏப்ரல்  மாதம்  கலைக்கப்படலாம்   என்கிறார்.

“அமைச்சரவைக்  கூட்டத்தில்   6வது  நாடாளுமன்றக்  கூட்டத்தை   மார்ச்  5 முதல்  ஏப்ரல்  4வரை   வைத்துக்கொள்ள  முடிவு   செய்யப்பட்டது.

“கூட்டம்   நடந்து  கொண்டிருக்கும்போது   நாடாளுமன்றம்   கலைக்கப்படுவது   சாதாரணமாக   நடப்பதில்லை”,  என்று   நஸ்ரி  கூறியதாக  பெர்னாமா  நேற்று   அறிவித்திருந்தது.

கடந்த  நவம்பர்  மாதம்  துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி,,  பிப்ரவரியில்   வரும்  சீனப்புத்தாண்டுக்குப்  பிறகு   14வது  பொதுத்   தேர்தல்   நடத்தப்படலாம்   என்று   கோடி  காட்டியிருந்தார்.

ஆனால்,  பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கைப்  பொருத்தவரை    2016இலிருந்து  தேர்தல்   எப்போது   வேண்டுமானாலும்   நடக்கலாம்   என்று   கூறி  வருகிறாரே   தவிர   உறுதியாக   எதையும்   கூறவில்லை.

ஆனால்,  தேர்தல்  தொடர்பாகக்  கூறப்படும்   ஆருடங்களை   இரசிக்கிறார்.

2016இலேயே,   “ஆருடங்களை  எல்லாம்  இரசிக்கிறேன்.  ஆருடங்கள்  தொடரட்டும்”,  என்று  கூறியவர்   அவர்.