முகைதினுக்கு எதிரான முன்னாள் பெர்சத்து உறுப்பினரின் வழக்கு தள்ளுபடி

பெர்சத்து    தலைவர்    முகைதின்   யாசினுக்கு  எதிராக   முன்னாள்  பெர்சத்து    உறுப்பினர்  முகம்மட்  அனாஸ்  சுடின்   தொடுத்த   அவதூறு  வழக்கு  நீதிமன்றத்தில்     தள்ளுபடி   செய்யப்பபட்டது.

தள்ளுபடி   செய்த   கோலாலும்பூர்   உயர்  நீதிமன்ற  நீதிபதி   அது   ஆதாரமற்ற,  அடாவடித்தனமான   வழக்கு   என்று   தீர்ப்பளித்தார்.

இதனை     முகைதினின்   வழக்குரைஞர்   ரோஸ்லி  டஹ்லான்   செய்தியாளர்களிடம்   உறுதிப்படுத்தினார்.

அனாஸ்   வழக்குச்   செலவாக  ரிம5,000  கொடுக்கவும்     நீதிபதி  உத்தரவிட்டார்.

நெகிரி  செம்பிலான்   பெர்சத்து  முன்னாள்    தலைவரான   அனாஸ்,  தம்மை  முகைதின்   ஒரு  பிகேஆர்  உறுப்பினர்  என்று  குறிப்பிட்டார்  என்பதற்காக  அந்த  வழக்கை  தொடுத்திருந்தார்.