அழிவின் விளிம்பில் தமிழகத்தின் கோட்டா, தோடா உட்பட 42 இந்திய மொழிகள்!

டெல்லி: தமிழகத்தின் 2 வட்டார மொழிகள் உட்பட 42 இந்திய மொழிகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றனவாம்.

இந்தியாவில் அட்டவணைப்படுத்தப்பட்ட 22 மொழிகள் மட்டுமின்றி 100-க்கும் மேற்பட்ட வட்டார மொழிகளும் பேசப்படுகின்றன. இந்த மொழிகளை சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பேசுகின்றனர்.

இதில் 42 வட்டார மொழிகளை 10,000க்கும் குறைவானோர்தான் பேசுகின்றனர். இந்த மொழிகள்தான் இப்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றனவாம்.

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 11 ஆதிகுடிகளின் மொழிகளும் மணிப்பூர் பழங்குடிகளின் 7 மொழிகளும் ஹிமாச்சலில் 4, ஒடிஷாவில் 3, கர்நாடகாவில் 2, தமிழகத்தில் 2 வட்டார மொழிகளும் அடங்கும்.

தமிழகத்தில் நீலகிரி மலையில் ஆதிகுடிகள் பேசும் கோட்டா, தோடா மொழிகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இந்த வட்டார மொழிகளுக்கு எழுத்து வடிவம் என்பது இல்லை. அருணாசல பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களிலும் ஆதிகுடிகளின் மொழிகள் அழியக் காத்திருக்கின்றனவாம்.

tamil.oneindia.com

TAGS: