ஆந்திர சிறையில் 3000 தமிழர்கள்

வழக்கு நடத்த முடியாமலும், ஜாமின் பெற சாத்தியம் இல்லாததாலும் சுமார் 2,700 முதல் 3,000 தமிழர்கள் ஆந்திர சிறைகளில் தவித்து வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் பிரதான செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவருமே மரம் வெட்டுபவர்கள் ஆவர்.

முறையான ஆதாரம் இல்லாமல் செம்மரம் கடத்துவது போன்ற பல்வேறு வழக்குகளில் அவர்களை ஆந்திர காவல்துறையினர் கைது செய்வதாக இந்த செய்தி குறிப்பிடுகிறது. இவ்வாறு பல வழக்குளில் தமிழர்களை கைது செய்யும் ஆந்திர காவல்துறை, அவர்கள் வெளியே வர முடியாமல் இருப்பதை உறுதி செய்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், சிறையில் வாடும் தமிழர்கள் 30,000 ரூபாய் பணம் அளித்து ஜாமின் பெற முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா

TAGS: