மாநில உரிமைகளுக்காக போராடும் தமிழகமும், ஆந்திராவும்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் விளையாட்டு விளையாடுவதாக, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டி உள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தாங்கள் கொண்டுவர உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தில், அதிமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். ஏனெனில், தமிழகமும் ஆந்திராவும் மாநில உரிமைகளுக்காகவே போராடி வருகின்றன என சந்திரபாபு நாயுடு தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

காவிரி விவகாரத்தில் அண்டை மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சயைனயை தீர்த்து வைக்காமல், அதை மத்திய அரசு தீவிரமாக வளர்த்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார் என மேலும் விவரிக்கிறது அச்செய்தி.

-தினமணி

TAGS: