குவான் எங் ஆயர் பூத்தேயில் போட்டியிடுவார்; ஜைரில் தஞ்சோங் பூங்காவில்

டிஏபி  தலைமைச்   செயலாளர்   லிம்  குவான்  எங்   எதிர்வரும்   பொதுத்   தேர்தலில்  தம்முடைய   ஆயர்  பூத்தே  தொகுதியைத்   தக்கவைத்துக்கொள்ள   போட்டியிடுவார். அவர்   மூன்றாவது   தவணையாக   அத்தொகுதியில்   போட்டியிடுகிறார்.

இதை  மாநில   டிஏபி   தலைவர்   செள  கொன்  இயோ  கட்சியின்  தஞ்சோங்  பூங்கா   சேவை  மையத்தில்     அறிவித்தார்.  அப்போது  பராமரிப்பு   முதல்வரான   லிம்மும்   அங்கு   இருந்தார்.

செள,  புக்கிட்  பெண்டேரா  நாடாளுமன்றத்   தொகுதிக்கும்   தஞ்சோங்   பூங்கா  மற்றும்   பூலாவ்  திக்குஸ்   சட்டமன்றத்   தொகுதிகளுக்கான   வேட்பாளர்களையும்    அறிவித்தார்.

புக்கிட்  பெண்டேரா-  வொங்  ஹொன்  வாய்,

தஞ்சோங்  பூங்கா-  ஜைரில்  கிர்  ஜோகாரி,

பூலாவ்  திக்குஸ்-  கிறிஸ்  லீ  சுன்  கிட்.