வடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக

வடக்கு மாகாணத்தில் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளை தொடர்ந்தும் விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காணி அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

புதுவருடத்தினை முன்னிட்டு அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கு மாகாண மக்களுக்கு தொடர்ந்தும் நல்ல செய்திகள் வந்து சேரும். பொது மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: