சோகமயமானது யாழ்: கறுப்புக் கொடிகளும் வீதிகளில்…

முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகிய இன்று யாழ்ப்பாணம் முழுவது சோகமயமாக காட்சியளிக்கின்றது.

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள அனைத்து வர்த்தகர்களும் வர்த்தக நிலையங்களை மூடி தமது துக்கத்தை அனுஷ்டிக்கின்றனர்.

வீதியில் சன நடமாட்டம் குறைவாகவும், சில இடங்களில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

தமிழினப் படுகொலைகள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்றைய தினம் பாரிய நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்தப்பட உள்ளன.

இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல இடங்களில் இன்றைய தினம் துக்கதினமாக அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

-tamilcnn.lk

 

TAGS: