பிரதமர் அலுவலகத்தில் மகாதிர், முதல் அமைச்சரவை கூட்டம் நடத்தினார்

 

புத்ரா ஜெயா, பெர்டானா புத்ராவில் பிரதமர் மகாதிர் அவரது முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார் என்று பெர்னாமா செய்தி கூறிகிறது.

இன்று காலை மணி 9.25க்கு தொடங்கிய அமைச்சரவைக் கூட்டத்தில் 13 அமைச்சர்களும் பங்கேற்றனர். அவர்களுடன் அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா மற்றும் அமைச்சரவை துணை தலைமைச் செயலாளர் மாஸிடா அப்துல் மஜிட்டும் கலந்து கொண்டனர்.

ஐந்தாவது மாடியிலுள்ள அவரது அறைக்குச் சென்ற மகாதிரை அரசாங்கத் தலைமைச் செயலாளர் வரவேற்றார். மகாதிர் தமது கடமையைத் தொடங்கும் கடிதத்திலும் கையொப்பமிட்டார்.

இதற்கு முன்னர் பிரதமர் மகாதிர் பெர்டானா தலைமைத்துவ அறவாரியத்திலுள்ள அவரது அறையிலிருந்து பணியாற்றினார்.